ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.!*



தூத்துக்குடி மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் பிரதான நிறுவனமான ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பல்வேறு கிராம மக்கள் மனு அளித்தனர்.

 தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு குறைகளை மனுக்களை அளித்தனர். இதனிடையே தூத்துக்குடி மீளவிட்டான், மடத்தூர். புதூர் பாண்டியபுரம். பண்டாரம்பட்டி. சில்வர்புரம், சங்கரபேரி,

வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், நடுவக்குறிச்சி, குமாரகிரி, சாமிநத்தம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

இது கூறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியதாவது 

"ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் எங்கள் கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது இந்த நிறுவனத்தால் இங்க கிராமத்தைச் சேர்ந்த பலர் வேலை வாய்ப்பை பெற்று வந்தனர். தற்போது இந்த ஆலை மூடப்பட்டு அதன் காரணமாக பலர் வேலை இழந்துள்ளனர். பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே இந்த ஆலையை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 

ஆலையை மீண்டும் திறக்கப்பட்டால் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்பதனால் அரசு ஸ்டெர்லைட் நிறுவனத்தை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இவ்வாறு கூறியிருந்தது

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி