ஏபிஜே அப்துல் கலாமின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் ஜீவ அனுக்கிரக மற்றும் பசுமை இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.!


டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜீவ அனுக்கிரக மற்றும் பசுமை இயக்கம் சார்பில் அப்துல் கலாம் திரு உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை பொது மக்களுக்கு மரக்கண் வழங்கினர்.

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜீவா அனுக்கிரக மற்றும் பசுமை இயக்கம் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஜீவ அனுக்கிரக அறக்கட்டளை நிறுவன தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் முன்னிலையில் 


சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெருஞ்செழிய பாண்டியன் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து 100 பேருக்கு இலவச மரக்கண்களை பொதுமக்களுக்கு வழங்கினர். 

நிகழ்ச்சியில் பசுமை இயக்க நிர்வாகிகள் பாபு, ராமர், பாலசுப்பிரமணியன், செல்வகுமார், நல்லதம்பி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!