Posts

Showing posts from September, 2022

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.231.21 கோடி மதிப்பிடில் திட்டப் பணிகள் - மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தொடங்கி வைத்தார்.!

Image
தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் ரூபாய் 231.21 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா துறைமுக அலுவலக வளாகத்தில் இன்று துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து மற்றும் ஆயுஷ் அமைச்சர்  சர்பானந்த சோனாவால் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்திற்கு வருகை புரிந்து ரூபாய் 100 கோடி திட்டமதீப்பிட்டில் 1300 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் கடலோர வேலைவாய்ப்பு அபிவிருத்தி திட்டத்திற்கு (Tuticorin SPEEDZ) அடிக்கல் நாட்டியும்,  ரூ.16 கோடி செலவில் நிலக்கரி சேமிப்பு சாலை மற்றும் வடிகாலினை மேம்படுத்துதற்கான பணியினை துவக்கி னைத்தும் மற்றும் ரூபாய் 65.53 கோடி செலவில் உள்துறைமுக வளர்ச்சி பணிகளான (துறைமுக நுழைவுவாயிலை அகலப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்தப்பட்ட பகுதியை ஆழப்படுத்துதல்) பணிக்கான அடிக்கலை நாட்டினார். மேலும் நவீன துறைமுக திட்டங்களான ரூ.2.29 கோடி செலவில் துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்திற்கான இந்திய மென்பொருள் வடிவமைப்பினை துவக்கி வைத்தார். இவ்வாறாக நம் நாட்டிலே தயாரிக்கப்பட்ட மென்பொருளை உபயோகிப்பது...

தமிழகத்தில் அக்.2-ம் தேதிக்கு பதில் நவ.6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

Image
தமிழகத்தில் அக்.2-ம் தேதிக்கு பதில் நவ.6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது. நவம்பர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்கு அனுமதி மறுத்தால் காவல்துறை, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கம்ப்ரஸ் பண்ணின புதுவெள்ளமும்.. சுழல் காத்தும்... இம்ப்ரஸ் பண்ணுமா? - பொன்னியின் செல்வன் விமர்சனம்

Image
ஆயிரம் வருஷத்து சோழ வரலாற, 5 பாகமா, அரை நூற்றாண்டே சொக்கிப்போற மாதிரி கற்பனயை கலந்து எழுதி வச்சுருந்தாரு கல்கி. இன்னிக்கு வரைக்கும் புத்தக கண்காட்சிகளிலும், வாசிப்பவர்கள், பேச்சாளர்கள் என பலராலும் பேசப்படும் ஒரு கதை தான் பொன்னியின் செல்வன். அந்தளவுக்கு பொன்னியின் செல்வனில் வார்த்தைகளிலும், வர்ணனைகளிலும் விளையாடுவார் கல்கி. எல்லையில்லா கற்பனை கடலுக்கு எக்கச்சக்க தீனி போட்டிருப்பாரு மனுஷர். இந்தக்கதைய தழுவி மணிரத்தினம் எடுத்த சினிமாப்படமான பொன்னியின் செல்வன் இன்னிக்கு வெளியாகி இருக்கு. இரண்டு பாகங்களா வெளியிட முடிவு பண்ணி முதல் பாகம் ரிலீஸ் ஆகி இருக்கு. இந்தப்படம் வெளியாகுறதுக்கு முன்னாடியே 3 நாளைக்கான அட்வான்ஸ் புக்கிங் எல்லாமே முடிஞ்சு போச்சு..  பொன்னியின் செல்வன் புத்தகம் படிச்ச வாசகர்களும், படிக்காதவர்களுமாக பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் புக்கிங் பண்ணிட்டாங்க.. இன்னமும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழியும் என்பதெல்லாம் உண்மை தான். பொன்னியின் செல்வன் கதை பலருக்கும் தெரியும் என்பதால் நேரடியா படம் எப்டி இருக்குன்னு பார்க்கலாம்.  ஏற்கனவே பாகுபலி-2 படத்தை பார்த்துட்டு பலரும், ர...

கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் உலக சாதனை மற்றும் ஆசிய புத்தக சாதனை நிகழ்ச்சி.!

Image
உலக இருதய தினத்தை முன்னிட்டு, கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் ஒரே நேரத்தில் அதிகமான நபர்கள் ஒன்று சேர்ந்து ஆரோக்கியமான இதயம் போன்று கை அசைவினை வெளிப்படுத்தும் வகையிலான உலக சாதனை மற்றும் ஆசிய புத்தக சாதனை நிகழ்ச்சி வெற்றிகரமாக நேற்று (28.09.2022) மாலை 3.30 மணியளவில் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மணி உயர் நிலைப்பள்ளியின் நானி பல்கிவாலா கலையரங்கத்தில் நடைபெற்றது.  கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறப்புரை ஆற்றினார். கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவிகள் இந்த சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் அனைவரும் சேர்ந்து ஆரோக்கியமான இதயம் போன்று கை அசைவினை வெளிப்படுத்தி உலக சாதனை மற்றும் ஆசிய புத்தக சாதனை புரிந்தனர்.  இதனைத் தொடர்ந்து உலக சாதனை அமைப்பின் அலுவலக பதிவுகள் மேலாளர் கிரிஸ்டோபர் ட...

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் - விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.!

Image
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் சாருஸ்ரீ, மற்றும் துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்றது.  கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி குழந்தைகளை அழைத்து வருவதற்கு டிஎம்பி வங்கியின் மூலம் மாநகராட்சிக்கு இரண்டு வேன்கள் தரப்பட்டுள்ளதாகவும், இரண்டு வேன்களை இயக்குவதற்கு டிரைவர்கள் தேவைப்படுவதாகவும்,  இந்த ஓட்டுனர்களை நகர்புற வாழ்வாதார மையம் (CLC) மூலம் பணியமர்த்தி கொள்ளவும், இதற்காகும் ஓராண்டு (17.08.2022 முதல் (16.08.2023 வரையிலான காலம்) செலவுத் தொகை ரூபாய் 3,30,690 கல்வி நிதியிலிருந்து செலவு மேற்க் கொள்ளவும்,  இம்மாநகராட்சி பகுதியான பிஎம்சி பள்ளி அருகில் அமைந்துள்ள கழிவு நீரேற்றம் நிலையத்தில் இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு மாநகராட்சியில் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரின் தினக்கூலி அடிப்படையில் மனித ஆற்றல்கள், நகர்புற வாழ்வாதார மையம், மூலம் தற்காலிகமாக பம்ப் ஆப்ரேட்டர் பணியிடத்திற்கு ஆட்கள் நிரப்பப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற...

தூத்துக்குடியில் காவலர் குழந்தைகள் நல காப்பகம் - மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் திறந்து வைத்தார்.!

Image
தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை காவலர்கள் தங்களது குழந்தைகளை பகல் நேரங்களில் பார்த்து கொள்வதற்காக குழந்தைகள் நல காப்பகம் அமைத்து தர மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். காவலர்களின் கோரிக்கையின் அடிப்படையில் ஆயுதப்படை காவலர்கள் நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தனிப்பட்ட முயற்சியில் 3வது மைல் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் காவலர் குழந்தைகள் நல காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த குழந்தைகள் நல காப்பகத்தை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  இந்நிகழ்வின்போது மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜெயராஜ், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, உதவி ஆய்வாளர்கள் கணேச மணிகண்டன், ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட ஆயுதப்படை காவல் துறையினர் மற்றும் காவலர்கள் குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மனிதக் கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் மாவட்ட ஆட்சியர்கள் சஸ்பெண்ட் - ஐகோர்ட் கிளை எச்சரிக்கை.!

Image
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது - ஐகோர்ட் கிளை எச்சரிக்கை #Humanwaste #maduraihighcourt #districtcollector

தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இரவு, பகலாக போலீஸ் ரோந்து -அரசு விளக்கம்

Image
தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில் காவல்துறை உள்ளது; சட்டம் ஒழுங்கை கண்காணிப்பதற்காக போலீசார் இரவு, பகலாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அரசு விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ், பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு - தலைவர்கள் வரவேற்பு.!

Image
தமிழ்நாட்டில் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவிருந்த ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக்  கொள்வதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி குறித்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் காவல்துறை சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழலை சுட்டிக்காட்டி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

950 கிலோ குட்கா கடத்தல்: பெங்களுர் கோடீஸ்வரர் தூத்துக்குடியில் கைது - 10 வங்கிகளில் உள்ள 16 லட்ச ரூபாய் முடக்கம், கார், லாரி பறிமுதல்.!

Image
  தூத்துக்குடியில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த குட்கா கடத்தல்  மற்றும் மொத்த விற்பனையில் மூளையாக செயல்பட்டு  இல்லாத நிறுவனங்களை இருப்பதுபோன்று போலியாக உருவாக்கி, அதன் மூலம் பணம் சம்பாதித்த பெங்களுரை சேர்ந்த கோடீஸ்வரர் கைது செய்யப்பட்டார் தென்மாவட்டங்களில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை அடியோடு ஒழிப்பதற்கு மதுரை தென்மண்டல ஐ.ஜி திரு. அஸ்ரா கார்க் அவர்கள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு பலர் கைது செய்யப்பட்டு பெருமளவில் குட்கா மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்குளில் சம்மந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து  பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை தென்மாவட்டங்களுக்கு மூளையாக செயல்பட்டு மொத்த விற்பனை மற்றும் கடத்தலுக்கு மூல காரணமாக செயல்படுபவர்கள் யாரென கண்டுபிடித்து அடியோடு ஒழிப்பதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் மேற்பார்வையில் தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் ஜி. சந்தீஸ...

ஆன்லைன் சூதாட்டம் - அவசர சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Image
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்கும் அவசரச் சட்டத்திற்கு முதலமைச்சர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்! அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் நடைமுறை படுத்தப்படும் என தகவல்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவாக ₹81.47ஆக வீழ்ச்சி!

Image
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவாக ₹81.47ஆக வீழ்ச்சி! #IndianRupee | #USDollar

9 வயது சிறுமியின் அபார திறமை!- இந்திய வம்சாவளியை சேர்ந்த துபாய் சிறுமி ஹனா முஹமது ரஃபீக் அசத்தல்.!- ஆப்பிள் CEO டிம் குக்-க்கு மின்னஞ்சல் அனுப்பி, அவரிடம் இருந்து பாராட்டு!

Image
ஆப்பிள் ஐபோன்களில் பயன்படுத்தப்படும் IOS இயங்குதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் செயலியை, தனது சொந்த முயற்சியில் உருவாக்கி அசத்தியுள்ளார் இந்திய வம்சாவளியை சேர்ந்த துபாய் சிறுமி ஹனா முஹமது ரஃபீக்! அந்த செயலி குறித்து ஆப்பிள் CEO டிம் குக்-க்கு மின்னஞ்சல் அனுப்பி, அவரிடம் இருந்து பாராட்டு பெற்றுள்ளார்!

சிறுமி பாலியல் வன்கொடுமை - காவல் ஆய்வாளர், உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரி, பாஜக பிரமுகர் உள்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை -சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!

Image
 🅱️REAKING சிறுமி பாலியல் வன்கொடுமை - காவல் ஆய்வாளர், உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரி, பாஜக பிரமுகர் உள்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை -சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.! வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் உறவினர்கள் 6 பெண்கள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை! சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

மகாலய சர்வ அமாவாசை முன்னிட்டு ஸ்ரீமத் சிவசேதுராம முருகவேல் சுவாமிகள் சார்பில் அன்னதானம்.!

Image
ஆடி அமாவாசைக்கு பிறகு பெரிய அமாவாசையாக கருதப்படுவது இந்த மகாலய சர்வ அமாவாசை. இந்த அமாவாசையை  முன்னிட்டு உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கரையில் தீர்த்தமாடி கோயில் சுற்றி உள்ள 22 புண்ணிய தீர்த்தமாடி நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.  சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கவனத்தில் கொண்டு சிறந்த தானமான அன்னதானத்தை ஸ்ரீமத் சிவசேதுராம முருகவேல் சுவாமிகள் அன்னதான மடம் சார்பாக அருகில்  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இவர் தொடர்ந்து அமாவாசை பௌர்ணமி மற்றும் நல்ல நாட்களில் அன்னதானம் செய்து வருகிறார் அது மட்டுமல்லாது  ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி தன்னால் முயன்ற அளவு யாசகம் வாங்கி அதன் மூலம் தர்ம காரியங்கள் செய்து வருகிறார் இதனால் மக்கள் பயனடைவதோடு மட்டுமல்லாமல் மன மகிழ்ச்சியோடும் தன்னார்வ தொண்டர்களாக அவருடன் இணைந்து பணியாற்றுகின்றனர்

தேசிய, தென் இந்திய தடகளத்தில் சாதனை... திருப்பூர் வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு

Image
33-வது தென் இந்திய மாநில அளவிலான தடகளப்போட்டிகளிலும், 17-வது யூத் தடகள சேம்பியன்ஷிப் போட்டிகளிலும் திருப்பூர் மாவட்ட வீரர் & வீராங்கனைகள் தமிழக தடகள அணி சார்பில் பங்கேற்றும், பதக்கம் வென்றும் பெருமை சேர்த்த திருப்பூர் மாவட்ட வீரர் & வீராங்கனைகளை பாராட்டி சிறப்பு செய்யும் நிகழ்ச்சியானது இன்று (24.09.2022, சனிக்கிழமை) ஷெரீப் காலனியிலுள்ள, கிட்ஸ் கிளப் இன்டர்நேஷனல் பள்ளியில் திருப்பூர் தடகள சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் தடகள சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். கிட்ஸ் கிளப் பள்ளி குழுமங்களின் சேர்மன் மோகன் கார்த்திக், தடகளப் பயிற்சியாளர்கள் திவ்ய நாகேஸ்வரி & அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  திருப்பூர் தடகள சங்க செயலாளர் முத்துக்குமார் வரவேற்புரையாற்றினார். டெக்னோ ஸ்போர்ட்ஸ் இயக்குநர் சந்தீப் குமார், வடிவேல் நிட் ப்ராஸஸ் நிர்வாக இயக்குநர் ஜெயப்பிரகாஷ், டெக்ஸான் எக்ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குநர் மதிவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.  திருப்பூர் மாவட்டத்திலிருந்து தமிழக தடகள அணி சார்பில் பங்கேற்று வெற்றிபெற்ற ஏழு வீ...

அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா; நடை பயணத்தில் 200 பேர்!

Image
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் 40வது ஆண்டு ரூபி ஜூப்லி விழாவை முன்னிட்டு வ.உ.சி கல்லூரியில் இருந்து பழைய துறைமுகம் வரை Walkathon Race நடைபெறுகிறது. இது குறித்து அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் தலைவர் தமிழரசு இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது;  தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு 27.09.2022 அன்று மாணிக்கம் மஹாலில் வைத்து ரூபி ஜீபிலி விழா வெகு விமரிசையாக நடத்தப்படவுள்ளது.  விழாவின் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வருகை தர உள்ளார். சிறப்பு அழைப்பாளர்களாக  சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  அமைச்சர் அனிதா R.ராதா கிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். விழாவின் தொடக்கத்தில் ஜீபிலி விழாக்குழுத் தலைவர் ஜே பிரகாஷ் வரவேற்புரையாற்றுகிறார். அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத் தலைவர் T.R.தமிழரசு ...

பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் - கனிமொழி எம்.பி பேச்சு!

Image
தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் 'பசுமைவிகடன்', 'நபார்டு வங்கி' மற்றும் 'காமராஜ் கல்லூரி'  இணைந்து வழங்கும் "பருவ நிலை மாற்றமும்  சுற்றுபுறச் சூழலும்" என்ற தலைப்பிலான தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.  இந்நிகழ்ச்சியில்,  தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.  "பருவ நிலை மாற்றமும்  சுற்றுபுறச் சூழலும்" என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது.  இதில் பேசிய கனிமொழி, "பருவ நிலை மாற்றத்தினால் காற்று, மழை, வெயில், குளிர் என அந்தந்த பருவங்களில் நடக்கக்கூடியவை பருவம் மாறி நடக்கிறது. இயற்கை வளங்களின் அழிவே இதற்கு காரணம். தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன.  இதில் சில தீவுகளின் பரப்பளவு கடல் அரிப்பால் குறைந்துள்ளது. செயற்கை தடுப்புகளால் அவற்றை பாதுகாத்து அதன் பரப்பளவை அதிகரிக்க வனத்துறை முயற்சித்து வருகிறது. பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வினை மாணவர்கள்,மக்கள் மத்தியில் ஏற்படு...

பிஎப்ஐ, எஸ்டிபிஐ மீதான என்ஐஏ சோதனை..பழிவாங்கும் நடவடிக்கை..வைகோ கண்டனம்.!

Image
சென்னை: நாடு முழுவதும் உள்ள பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ ஆகிய அமைப்புகள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட என்ஐஏ சோதனைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அமைப்புக்களின் மீதான மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை கை விட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அண்மைக் காலமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு, தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை ஆகியவைகளின் மூலம் இஸ்லாமிய அமைப்புக்களின் நிர்வாகிகள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவைகளில் புகுந்து சோதனை என்ற பெயரில் அவர்களை அச்சுறுத்தி வருகிறது. எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புக்கள் மக்களாட்சி முறையில் வெளிப்படையாக இயங்கி வரும் அமைப்புக்களாகும். இந்த அமைப்பில், இந்துக்கள் முதலான பிற மதத்தினரும் நிர்வாகிகளாக உள்ளனர். ஆம்புலன்ஸ் வண்டிகள் மூலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி செய்தல், இயற்கை பேரழிவின்போது அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளை அளித்தல், குருதிக் கொடை வழங்குதல், மத நல்லிணக்க ஊர்வலங்களை நடத்தி, ஒற்றுமைப் படுத்துதல் என பல வகைகளிலும் இந்த ...

தூத்துக்குடி அருகேயுள்ள வான் தீவு பகுதியில் கனிமொழி எம்.பி ஆய்வு.!

Image
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன இந்த தீவுகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி அருகே உள்ள வான் தீவு கடல் பகுதியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதில் குறிப்பாக வான்தீவின் நிலப்பரப்பு மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது, இந்த நிலையில் வான் தீவின் நிலப்பரப்பை அதிகப்படுத்தும் வகையில் அலைத்தடுப்புச் சுவர்கள், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த பணிகளையும், வனத்துறை மூலம் வான் தீவு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும்  கனிமொழி எம்.பி இன்று படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  மேலும் வான் தீவு பகுதியில் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வரும்  பனை மர செடிகளையும் பாதுகாக்கப்பட்ட பவளப்பாறைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அதிகாரியிடம் கேட்டறிந்தார்.  ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் டோமர் ...

‘VOC Port to become global container transhipment hub’ - VOC Port Chairman Speaking at the 70 th anniversary celebrations of the Thoothukudi Shipping Agents’ Association

Image
The VOC Port will become international container transshipment hub in future as the outer harbour development work is to be undertaken on an outlay of Rs. 7,000 crore, its Chairman T.K. Ramachandran said. Speaking at the 70 th anniversary celebrations of the Thoothukudi Shipping Agents’ Association held here on Friday, he said the port, which was executing various projects with the objective of upgrading the seaport into container transshipment hub, was set to start the outer harbour development work at a cost of Rs. 7,000 crore. Besides deepening the outer harbour to receive larger vessels, new berths would be constructed under to handle more ships. Since the port was strategically and advantageously located, the ongoing projects would transform the harbour into a international container transshipment port, he said. Informing that the port which had recorded 11% growth during the current fiscal, had set the target of handling 40 million tonne cargo to earn Rs. 800 crore. The upcoming ...

தூத்துக்குடி வ. உ. சி துறைமுகம் விரைவில் ஹைட்ரஜன் மையமாக மாறும் -துறைமுக ஆணையத் தலைவர் டி.கே.இராமச்சந்திரன்

Image
தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கத்தின் 70வது ஆண்டு பவள விழா கொண்டாட்ட நிகழ்ச்சி  தூத்துக்குடியில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். சங்கத்தின் தலைவர் ஆனந்த் மொராயிஸ் வரவேற்றுப் பேசினார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் கவுரவ விருந்தினர் உரையாற்றினார்.  தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் என். சுப்ரமணியன், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் குறித்து விளக்கி பேசினார். மேலும் கப்பல் முகவர்கள் விமானம் மூலமும் ஏற்றுமதி வணிகம் முன் வர  வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தின் தலைவர் டி. கே . இராமச்சந்திரன் பேசியதாவது, 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த  தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வ.உ.சி. துறைமுகம் கப்பல் முகவர்களுக்கும்,  ஏற்றுமதி இறக்குமதி வணிகம் செய்பவர்களுக்கும் எப்போதும் உதவத் தயாராக இருக்கிறது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை சரக்கு பெட்டக பரிமாற்ற மையமாக உயர்த்து...

காயாமொழியில் ரூ. 1.05 கோடி மதிப்பில் புதிய மருத்துவ கட்டிடங்கள் - கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.!

Image
தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி ஊராட்சிக்குட்பட்ட காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.1.05 கோடி மதிப்பில் பல்வேறு புதிய மருத்துவ கட்டிடங்களை மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து விழாவில் கனிமொழி எம்.பி தெரிவித்ததாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் தரப்பட்டுள்ளன. இன்று சுகாதாரத்துறை சார்பில் கிட்டத்தட்ட ரூ.1.05 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.   மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசும்பொழுது ஒன்றை குறிப்பிட்டு சொன்னார். இன்னும் ஏறத்தாழ ரூ.2 கோடி மதிப்பிலான திட்டத்திற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவிலேயே முடிக்கப்பட்டு பொதும...

மக்களுக்காக போராடுகின்ற ஒரே இயக்கம் அதிமுக தான் - பொதுக் கூட்டத்தில் எஸ்.பி சண்முகநாதன் பேச்சு.!

Image
பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரம் பகுதியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகநாதன்  திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றறை ஆண்டுகள் ஆகிறது திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்திற்கு ஏதாவது புது  திட்டத்தை ஸ்டாலின் கொண்டு வந்துள்ளாரா இல்லை.  அதற்கு மாறாக பழிவாங்கும் நோக்கில் முன்னால் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் மூலம் சோதனை நடைபெறுகிறது. முன்னால் அமைச்சர்  வேலுமணி வீட்டில் ஒருமுறை, இரண்டு முறை அல்ல 5 முறை  சோதனை நடைபெற்றது.  லஞ்ச ஒழிப்பு சோதனையில்  எடுத்ததை காட்ட முடியுமா அதிமுகவின் மீது பொய் வழக்கு போடுவதற்காகவே இந்த ரைடு நடைபெறுகிறது என குற்றம்சாட்டிய அவர்  இன்று திமுக அமைச்சரவையில்  உள்ள அமைச்சர்கள் கீதா ஜீவன் , அனிதா ராதாகிருஷ்ணன் என பல்வேறு அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது ஊழல் செய்த அமைச்சர்களை  அருகில் வ...

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

Image
தூத்துக்குடி மாநகராட்சியில் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.  வடகிழக்கு பருவமழை துவங்கும் காலம் நெருங்கி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான மின் மற்றும் எரிபொருள் நிரப்பி இயங்கக்கூடிய மோட்டார்கள் அனைத்தும் பழுது பார்த்து இயக்க நிலைக்கு தயார் படுத்தும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.  ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, செயற்பொறியாளர், உதவி பொறியாளர், நிர்வாக அலுவலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர்.

தூத்துக்குடி பிரஸ் கிளப் : சர்ப்ரைஸ் விசிட் அடித்த மாநகராட்சி மேயர் - புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து.!

Image
தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி பிரஸ் கிளப்பிற்கு திடீர் விசிட் செய்த நிலையில், புதிதாக  தேர்ந்தெடுக்கப்பட்ட தூத்துக்குடி பிரஸ் கிளப்  நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தூத்துக்குடி  மாநகராட்சியின் மேயர் ஜெகன் பெரியசாமி இன்று தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்திற்கு வருகை தந்தார். புதிய நிர்வாகிகளை பாராட்டும் விதமாக அலுவலகத்தில் இருந்த மன்றத்தின் செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் மாரிமுத்து ராஜா துணை தலைவர் லட்சுமணன் இணை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.  தலைவர் காதர் மைதீன் பணி நிமித்தமாக வெளியில் சென்றிருந்ததால் அவருக்கு மேயர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.தொடர்ந்து அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திடீர் சாலை மறியல்: தூத்துக்குடியில் பரபரப்பு!

Image
தூத்துக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழகத்தில் சென்னை, கோவை, ஏர்வாடி, தேனி, கடலூர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் அதன் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தூத்துக்குடி நிர்வாகிகள், தொண்டர்கள், இன்று காலை டபிள்யூஜிசி ரோட்டில் பள்ளிவாசல் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மத்தியபாகம் சப் இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடியில் 27ஆம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து!- மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

Image
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகின்ற 27ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்றும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.