தூத்துக்குடியில் 1லட்சத்து 80ஆயிரம் மதிப்புள்ள 6 பவுன் தங்க நெக்லஸை திருடியவர் கைது.!

தூத்துக்குடியில் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.1லட்சத்து 80ஆயிரம் மதிப்புள்ள 6 பவுன் தங்க நெக்லஸை திருடியவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்த புலமாடன் மகன் சின்னதுரை (40) என்பவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நெக்லஸ் கடந்த 17.01.2023 அன்று காணாமல் போயுள்ளது. இதுகுறித்து சின்னத்துரை இன்று அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இதில் சின்னத்துரையின் உறவினரான கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்த மாயாண்டி மகன் சின்னதுரை (21) என்பவர் தங்க நெக்லஸை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய போலீசார் சின்னத்துரையை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட ரூ.1லட்சத்து 80ஆயிரம் மதிப்புள்ள 6 பவுன் நெக்லஸையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்