தூத்துக்குடியில் பள்ளி அருகே டாஸ்மாக் கடை - அகற்ற வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம்!

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு இடையூறாக பள்ளி அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தூத்துக்குடி டூவிபுரம் 5வது தெருவில் டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. அருகில் பள்ளிக் கூடம் செயல்பட்டு வருகிறது. போதையில் வரும் நபர்களால் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும், பெண்களும் மிகவும் சிரமத்தில் ஆளாகி வருகிறார்கள். இதைப் பற்றி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த காசிலிங்கம், ராஜவேல், மான்சிங் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர். 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!