தூத்துக்குடியில் பள்ளி அருகே டாஸ்மாக் கடை - அகற்ற வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம்!

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு இடையூறாக பள்ளி அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தூத்துக்குடி டூவிபுரம் 5வது தெருவில் டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. அருகில் பள்ளிக் கூடம் செயல்பட்டு வருகிறது. போதையில் வரும் நபர்களால் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும், பெண்களும் மிகவும் சிரமத்தில் ஆளாகி வருகிறார்கள். இதைப் பற்றி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த காசிலிங்கம், ராஜவேல், மான்சிங் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர். 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்