ராமநாதபுரம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் ரூ.32.68 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் : மூன்று அதிகாரிகள் மீது வழக்கு பதிவு - லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை.!
இராமநாதபுரம் பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் வாகனம் மற்றும் ஓய்வு அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.32.68 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூன்று அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.