வேன் மீது பஸ் மோதியதில் 2 பேர் பலி


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கிராமத்தில் பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. 


பொங்கல் விழா நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த கலைஞர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்தவுடன் ஆடல், பாடல் கலைஞர்கள் ஒரு வேனில் மதுரைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். 

இன்று அதிகாலை திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள நத்தம்பட்டி - லட்சுமியாபுரம் சாலையில் வேன் சென்று கொண்டிருந்த போது, ஊட்டியில் இருந்து மதுரை வழியாக செங்கோட்டைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, வேன் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் சிக்கிய, வேன் ஓட்டுநர் மதுரையைச் சேர்ந்த ஸ்ரீதர் (31) மற்றும் ரகு (21) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், வேனில் சென்றவர்கள் என 8 பேர் படுகாயமடைந்தனர். 

விபத்து குறித்து தகவலறிந்த நத்தம்பட்டி காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து நத்தம்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!