சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உலக புலிகள் தின கருத்தரங்கு.

 சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சர்வதேச புலிகள் தினத்தை முன் னிட்டு, இயற்கை வள பாதுகாப்பு, அவற்றில் விலங்குகளின் முக்கியத் துவம் என்னும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி கலை யரங் கில் நடைபெற்றது. இவ்விழாவில் தலைமையேற்று பேசிய கல்லூரி முதல்வர் ராதா கிருஷ்ணன் புலி களின் வாழ்க்கை முறைகள், உணவு, வாழ்விடம், புலிகளால் வனப் பகுதிக்கும் அதனை சார்ந்த வன உயிரினங்களுக்கும் கிடைக் கும் நன்மைகள், புலிகளைஅழிவில் இருந்து பாதுகாக்க, அரசு மேற்க் கொண்டுள்ள நடவடிக்கைகள்,  புலி கள் கணக்கெடுப்பு முறைகள்; புலி கள் பாதுகாப்பதன் அவசியம் குறித் து மாணவர்கள் அனைவரும் அறிந் திருப்பது அவசியம்.என்றும், ஒவ் வொரு கல்லூரியிலும் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர் ந்து நடத்தப்பட வேண்டும் என்றார் 

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அறியும் வகையில், புலிகளின் வாழ்க்கை முறைகள் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. நிகழ்வில், சிறப்புரையாற்றிய சத்தியமங்கலம் புலிகள் காப்பகத் தின் வனச்சரக அலுவலர் பழனிச் சாமி பேசுகையில், வனங்களின் பாதுகாப்பு பற்றியும் வனவிலங்கு கள் குறிப்பாக புலிகளின் வாழ்க் கை வரலாறு அவற்றைப் பாதுகாப் பதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார. இதில் வனவிலங்கு உயிரியலாளர். கிருஷ் ணகுமார் வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்த உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். முன்னதாக, நாட்டு நலப்படுத்திட்ட ஒருங்கி ணைப்பாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். இறுதியாக காட்சி தொடர்பியல் துறை பேராசிரியர் ஜெயராஜ் நன்றி கூறினார் இதில் பல்வேறு துறைகளை சார்ந்த பேராசிரியர்கள், மாணவ, மாணவி கள் மற்றும் வன உயிரின ஆர்வலர் கள் திரளாக கலந்து கொண்ட னர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்