சிலம்ப போட்டியில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர்கள் சாதனை

 சிலம்ப போட்டியில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர்கள் சாதனை

திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கான சிலம்பம் போட்டிகள் AKR அகாடமி பள்ளியில்  நடைபெற்றது. 

இப்போட்டியில் திருப்பூர் மாவட்டத்தின் 27 பள்ளிகளைச் சேர்ந்த 850க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இப்போட்டியானது 12 வயதுக்குட்பட்டோர் முதல் 16 வயதுக்குட்பட்டோர் வரை நடைபெற்றது. 

இப்போட்டியில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவியர் போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகைச் சூடினர். 12 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 6ம் வகுப்பு மாணவர்கள் நந்திஷ் வெள்ளிப்பதக்கமும், நித்தின் ஹரிஷ் வெண்கலப்பதக்கமும் வென்றனர். 

14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 9ம் வகுப்பு மாணவிகள் மதுமிதா, சாரு தேஷ்னா ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர். 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 9ம் வகுப்பு மாணவி யாஷிகா வெண்கலப்பதக்கம் வென்றார்.

 இவ்வாறு போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமார் மற்றும் சிலம்பம் பயிற்சியாளர் கௌதம் ஆகியோரை பள்ளியின் தாளாளர் டாக்டர். சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி, இயக்குநர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்