திருப்பூரில் தேவர் குருபூஜை விழா

 திருப்பூரில் புதிய பேருந்து நிலையம் முன்பு பசும்பொன் பக்தர்கள் பேரவை சார்பில் பேரரசர் ராஜராஜ சோழன் 1038 வது சதய விழா, மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 222 வது குருபூஜை, தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116 வது குருபூஜை விழா என முப்பெரும் விழா மற்றும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர். இந்த விழாவில் பசும்பொன் பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ராயல் லட்சுமணன் தேவர் தலைமை தாங்கினார், மாநில தலைவர் குட்டி எ செல்லதுரை தேவர் முன்னிலை வகித்தனர், இதில் 500க்கும் மேற்பட்டோர் பெரும் திரளாக பங்கேற்றனர் .

இந்த விழாவில் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி.மற்றும் திருப்பூர் ஒருங்கிணைந்த தேவரின் கூட்டமைப்பின் சார்பாக அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!