மனநலம் பாதிக்கப்பட்ட பின் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை

 



ஈரோடு கணபதி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட உத்தண்டிபாளையம் சண்முகம் மனைவி சாந்தி (வயது 48) இவர் கடந்த இரண்டு மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்துள்ளார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் வேலைக்கு சென்ற பிறகு இவர் வீட்டில் தனியாக இருந்தார் வீட்டின் முன்பு உள்ள குளியல் அறையில் கதவை உள்பக்கமாக தாள் வைத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்றி தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சாந்தி தீப்பிடித்து எரிந்து போன நிலையில் இறந்து போய் உள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு மலையம்பாளையம் காவல் அதிகாரிகள் மன்சூர் அலி மற்றும் பரமசிவம் சென்று விசாரணை செய்து வருகிறார்கள்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!