நங்கநல்லூரில் பள்ளி சுற்றுச்சுவர் மீது மரம் விழுந்து விபத்து... மின் கம்பம் சேதம்.

 நங்கநல்லூரில் பள்ளி சுற்றுச்சுவர் மீது மரம் விழுந்து விபத்து. மின் கம்பம் சேதம். 

சென்னை நங்கநல்லூர், ஜெயகோபால் கரோடியா பள்ளியின் சுற்றுச் சுவர் மீது பெரிய மரம் ஒன்று கன மழையின் காரணமாக முறிந்து விழுந்தது. 

இதில் பள்ளியில் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. அதே போல் மரம் விழுந்த காரணத்தால் அருகில் இருந்த மின் கம்பம் முறிந்து விழுந்தது.  தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள், மற்றும் மின் வாரிய ஊழியர்கள் பணியை மேற்கொண்டனர் 

மாநகராட்சி ஊழியர்கள் மரக்கிளைகளை வெட்டி அகற்றி போக்குவரத்திற்கு வழிவகை செய்தனர். மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, மின் கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மரம் முறிந்து விழுந்ததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்