தூத்துக்குடி - கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு பைக்கில் திரும்பிச் சென்ற இளைஞர் வெட்டிக் கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை.!

தூத்துக்குடி - கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு பைக்கில் திரும்பிச் சென்ற இளைஞர்  வெட்டிக் கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை.!

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் வடிவேல் முருகன் (28). இவர் கொலை வழக்கு தொடர்பாக இன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் பைக்கில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை பொட்டலூரணி விலக்கு அருகே சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து வடிவேல் முருகன் பைக்கை அங்கேயே போட்டுவி்ட்டு காட்டிற்குள் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனாலும் மர்ம நபர்கள் அவரை விரட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்கோட்டை போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

முன் விரோதம் காரணமாக இந்த காெலை நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது.  இது தொடர்பாக புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் ராமலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகிறார். பட்டப் பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!