வாக்களிக்க சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக சிறப்பு ரயில் இயக்கம் - தூத்துக்குடி - சென்ட்ரல் இடையே முன்பதிவற்ற ரயில் : இன்று (ஏப்.20) இயக்கப்படுகிறது!


 வாக்களிக்க சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக  சிறப்பு ரயில் இயக்கம் - தூத்துக்குடி - சென்ட்ரல் இடையே முன்பதிவற்ற ரயில் : இன்று (ஏப்.20) இயக்கப்படுகிறது!

வாக்களிக்க சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக  தூத்துக்குடி - சென்னை சென்ட்ரல் இடையே சாதாரண பொதுப் பெட்டிகளுடன் இன்று (ஏப்.20) சனிக்கிழமை மாலை 04:30 மணிக்கு முன்பதிவற்ற சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படுகிறது. 

தூத்துக்குடி மாநகர பொதுமக்கள் இந்தச் சிறப்பு ரயிலை அதிக அளவில் பயன்படுத்த வேண்டுகிறோம் என்று தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்