திருப்பூர் ஆசிரியை மகள் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி...தேசிய அளவில் 250 வது ரேங்க் பெற்றார்

திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்த தாரணி என்ற பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் இந்திய அளவில் 250 வது ரேங்க் பெற்று இருக்கிறார். 

திருப்பூர் லிட்டில் பிளவர் பள்ளியில் பள்ளிப்படிப்பும், மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரியில் பல் மருத்துவம் படித்து இருக்கிறார். இவரது தந்தை முருகானந்தம் 
திருப்பூரில் துணிக்கடை வைத்து இருக்கிறார். தாயார் சோழன்மாதேவி திருப்பூர் இடுவம்பாளையம் பள்ளி ஆசிரியராக பணி புரிகிறார். பல் மருத்துவம் முடித்த தாரணி 4 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். 4 முறை தேர்வு எழுதிய நிலையில் இரண்டு முறை முதல் நிலைத்தேர்விலும், மூன்றாவது முறை நேர்முகத்தேர்விலும் வெற்றி பெற்ற நிலையில், நான்காவது முறையாக முயன்று ஐ.ஏ.எஸ்.,ஐ தன் வசமாக்கியுள்ளார். இதுகுறித்து ஐ.ஏ.எஸ்., வென்ற தாரணி கூறுகையில்,’ கோச்சிங் எதுவும் செல்லவில்லை. வழிகாட்டுதல்கள் மட்டும் பெற்றேன். எல்லோருக்கும் திறமை இருக்கிறது. அர்ப்பணிப்புடன் உழைத்தால் ஐ.ஏ.எஸ்., வெற்றி சாத்தியம் என்றார். 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்