புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாட்டம்

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 
 தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் 24/04/2024 புதன் கிழமை அன்று புதுச்சேரி வெங்கட்டா நகரில் அமைந்துள்ள தமிழ் சங்கத்தில்  கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துக் கொண்ட அனைவரையும்  புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேர்மன் R.L. வெங்கட்டராமன் வரவேற்றுப் பேசினார். கழகத்தின் மாநில தலைவர் பேராசிரியர் மு. ராமதாஸ் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். விழாவில் கலைமாமணி முனைவர் V.முத்து அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் எ. மு.ராஜன் அவர்கள் மாணவர்களுக்கான கட்டுரை போட்டியும் , பேச்சுப்போட்டியும் சிறப்பாக நடத்தி அதற்கு  ஆண்டாள் , கோமதி, ராதாகிருஷ்ணன், சப்தன், தீபா ஆகியோரை பேச்சு போட்டி , மற்றும் கட்டுரை  போட்டியில் கலந்து கொண்டவர்களின் நீதிபதிகளாக முன்னிறுத்தி வெற்றிப் பெற்றவர்களை தேர்ந்தெடுத்து வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் முன்னாள் பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் கோ . அ. ஜெகநாதன் அவர்கள் , மாநில செயலாளர் பரந்தாமன், இணை செயலாளர் ஆண்டாள், மீனவர் அணி தலைவர் சந்திரன், ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாநில துணை தலைவர் ராஜ்குமரன் , மாநில பொருளாளர் செல்வக்குமாரி ஆகியோர் விழாவினை ஒருங்கிணைத்தனர்.முடிவில் மாநில மகளிர் அணி தலைவர் விமலா பெரியாண்டி நன்றிகூறினார்.
பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற  கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், தலைவர்  பேராசிரியர் மு. ராமதாஸ் , கலைமாமணி முனைவர் V. முத்து, சேர்மன் R.L. வெங்கட்டராமன் ஆகியோர்  பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில்  ஏறாளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துக்கொண்டு விழாவினை  சிறப்பித்தனர். விழாவில் உயர்நிலை கமிட்டி உறுப்பினர்  ரவிகுமார், மாநில மீனவர் அணி துணை தலைவர்  காலாப்பட்டு குமார், சிவகுமரன், தண்டபாணி, சுப்ரமணி மற்றும் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்