ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரேகுடும்பத்தை சேர்ந்த (இரு குழந்தைகள் உள்ளிட்ட ) 4 பேர் பலி.

ஈரோடுமாவட்டம்,சத்தியமங்கலம் அரு கே ஏரங்காட்டூர் சாலையில், நெசவா ளர் காலனி என்ற இடத்தில், கரூரில் இருந்து சிறுமுகை, ஜடையம்பாளை யம் நோக்கி சென்ற காரும், பவானி சாகர் தனியார் உணவகத்தில் இரு ந்து, சத்தியமங்கலம்  நோக்கி வந்த காரும், எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சிறு முகை நோக்கி சென்ற காரில்பயணம் செய்த, சிறுமுகை ஜடையம்பாளை யத்தை சேர்ந்த விவசாயியும், கொசு வலை மற்றும் ஜன்னல் திரைச்சீலை கள்விற்பனைசெய்துவருபவருமான,  முருகன், அவரது மனைவி ரஞ்சிதா, மகன் 8 வயது அபிஷேக், மகள் 7 வயது நித்திஷா உள்ளிட்ட ஒரே குடும் பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள்


பவானிசாகர் தனியார் உணவகத்தில் இருந்து,இரவு உணவுசாப்பிட்டுவிட்டு, சத்தி நோக்கி வந்த சொகுசு காரில்  வந்த கல்லூரி மாணவர்கள் மோகன், சுஜித், விஷால் பத்ரி உள்ளிட்ட மூவரு க்குலேசானகாயங்கள்ஏற்பட்டுள்ளது. சொகுசுகாரைஅக்சராஎன்ற கல்லூரி மாணவி ஓட்டி வந்துள்ளார்.

இறந்து போன 4 பேரின் உடல்கள், உட ற் கூறு ஆய்விற்காக, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை சவகிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து குறித்து பவானிசாகர் காவல் துறை யினர் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் விபத்தில் மரணமடைந்துள்ளது ,இறந் தவர்களின்  உறவினர்களிடையே 
பெரும் சோகத்தை ஏற்படுததி உள்ளது.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!