தூத்துக்குடி :விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது - 300 கிராம் கஞ்சா மற்றும் கத்தி பறிமுதல்.!

தூத்துக்குடி :விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது - 300 கிராம் கஞ்சா மற்றும் கத்தி பறிமுதல்.!

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர்  முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று (05.06.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி பூபல்ராயர்புரம் மீன் மார்க்கெட் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததனர், 

அப்போது அவர்கள் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த சையது சர்தார் மகன் ருக்மேன் ஹக்கீம் (29) மற்றும் தூத்துக்குடி சக்திவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் பிரபு வினோத்குமார் (27) ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் ருக்மேன் ஹக்கீம் மற்றும் பிரபு வினோத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 300 கிராம் கஞ்சா மற்றும் ஒரு கத்தியையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்