மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையில் உள்ள பள்ளங்களை மூட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

*மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையில் உள்ள பள்ளங்களை மூட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!* மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மருத்துவ உதவிக்காக வருகிறார்கள். மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருப்பதால் பல்வேறு நோய்களுக்கு உரிய தீர்வு காணவும், எம்ஆர்ஐ ஸ்கேன் உட்பட பல்வேறு மருத்துவ சிகிச்சை வசதிகளை மேற்கொள்வதற்காகவும் வருகின்றவர்கள் மருத்துவமனை சாலையை கடந்து தான் வர வேண்டி இருக்கின்றது.மேலும் மக்கள் நடமாட்டம் இருப்பதால் ஆங்காங்கே ஸ்பீடு பிரேக்கர்கள் எனப்படும் வேகத்தடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றையும் தாண்டியும் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் அச்சாலையைக் கடக்கும் அனைத்து வாகனங்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றன. இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கீழே விழும் சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுகிறது. மயிலாடுதுறை தொகுதியின் வடக்கு பகுதியை முழுமையாக இணைக்க கூடிய இச்சாலை பள்ளங்கள் இன்றி அமைக்கப்பட வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும். சுமார் 45 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனையில் 7 மாடியில் கட்டடங்கள் எழுப்புவதற்காக பல்வேறு லாரிகளில் கட்டிட பொருட்கள் வருகின்ற நிலையில் இச்சாலையின் அவசியம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. பல மாதங்களாக இப்பள்ளங்கள் மூடப்படாததால் கேட்பாரற்ற நிலையிலும் உள்ளது. மக்களின் நலன் கருதி உடனடியாக இச்சாலையை மேம்படுத்திடவும் பள்ளங்களை உடனடியாக மூடிடவும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்