கோவில்பட்டியில் உரிய அங்கீகாரம் இல்லாமல் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்த கணினி மைய உரிமையாளர் கைது


 *கோவில்பட்டியில் உரிய அங்கீகாரம் இல்லாமல் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்த கணினி மைய உரிமையாளர் கைது*

கோவில்பட்டி இனாம் மணியாச்சி மேம்பாலம் அருகே மில்கேட்  சாலையில் மேலக்காலனியை சேர்ந்த மகேஸ்வரன் (59) என்பவருக்கு சொந்தமான துளசி கம்ப்யூட்டர்ஸ் என்ற பெயரில் கணினி மையம் நடத்தி வந்துள்ளார்.

அங்கீகாரம் இல்லாமல் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையின் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஜூன் 29 ம் தேதி துளசி கணினி மையத்தில் திடீரென சோதனை நடத்தியதாக தெரிகிறது. அப்போது, ​அங்கீகாரம் இல்லாமல் தனிப்பட்ட பயனர் ஐ.டி., யில் பதிவு செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நான்கு ரயில்வே முன்பதிவு டிக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மகேஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்து, கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்