புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாக மற்றும் செயற்குழு

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் 7/7/2024 ஞாயிறு அன்று காலை 10 மணி அளவில் தட்டாஞ்சாவடியில் அமைந்துள்ள கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. கழகத்தின் தலைவர்  பேராசிரியர் மு. ராமதாஸ் அவர்கள் தலைமையில் சேர்மன் ஆர். எல் வெங்கட்டராமன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொது செயலாளர் எ. மு. ராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக கழகம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் , எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கட்சி வளர்ச்சி பணி குறித்து செயல்பட வேண்டிய எதிர்கால திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்து ஆலோசித்து தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில துணை தலைவர்கள் நித்தியானந்தம் ,  ஆனந்தன், மாநில செயலாளர் ரவிகுமார், மாநில இணை செயலாளர்கள்  பூ. பெருமாள் , முருகன், இளங்கோவன், துணை செயலாளர்கள் கலியபெருமாள் , கஜேந்திர பாஸ்கர் , வேதராமன் , சித்தானந்தம் , ரகுபதி, சோமசுந்தரம் , இதய வேந்தன், கலிவரதன் , உதவி செயலாளர் ஆண்டாள், மகளிர் அணி தலைவி விமலா பெரியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்