2 நாய்களை தூக்கிட்டு கொல்லும் நபர்கள்.. அதிர்ச்சி வீடியோ

 திருப்பூர் அருகே 2 நாய்களை தூக்கிட்டு கொல்லும் நபர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள முளையாம்பூண்டி பகுதியில் உள்ள வேப்பமரத்தில் 2 நாய்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டு கொல்லப்பட்டதாக திருப்பூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச்சங்கத்தினருக்கு புகார் வந்தது. இத்துடன் அந்த பகுதியில் இரண்டு நாய்களை சிலர் கொடூரமாக தூக்கிலிட்டும், அடித்தே கொல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பிராணிகள் வதை தடுப்பு சங்க நிர்வாகி நாகராஜ் என்பவர் இதுகுறித்து மூலனூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் மூலனூர் அருகே உள்ள முளையாம்பூண்டி, கோவில்மேட்டுப்புதூரில் உள்ள முத்துசாமி கோவில் பகுதியில் வசிக்கும் கிட்டுச்சாமி என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, அவரது வளர்ப்பு நாயையும், இன்னொரு தெருநாயையும் மரத்தில் கட்டி தூக்கில் தொங்கவிட்டும், அடித்தே கொன்றதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து மூலனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நாய்களை தூக்கிட்டு கொல்லும் வீடியோ சமுக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!