மயிலாடுதுறை ஆர்எம்எஸ் தபால் நிலையத்தை மீட்டெடுக்க எம்பி சுதா துரித நடவடிக்கை திருச்சியில் ரயில்வே துறை உயர் அதிகாரிகளுடன் சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் நேரில் மனு

மயிலாடுதுறை ஆர்எம்எஸ் தபால் நிலையத்தை மீட்டெடுக்க எம்பி சுதா துரித நடவடிக்கை திருச்சியில் ரயில்வே துறை உயர் அதிகாரிகளுடன் சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் நேரில் பேச்சுவார்த்தை 

பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர். R. சுதா அவர்கள் திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளர் DRM அவர்களிடம், மயிலாடுதுறை ஆர் எம் எஸ் தபால் நிலையத்திற்கு இடம் ஒதுக்குவது குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்று தொலைபேசியில் பேசியதுடன், சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் அவர்களையும் தொழிற்சங்க நிர்வாகிகளையும் உடனடியாக திருச்சிக்குச் சென்று ரயில்வே துறை உயர் அதிகாரிகளை சந்திக்க அறிவுறுத்தினார். அதனை அடுத்து திருச்சி கோட்ட வணிக மேலாளர் மோகனப்பிரியா அவர்களிடம், திருச்சி கோட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் நந்திலால் அவர்களிடமும் நேரில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நூறு ஆண்டுகளாக இயங்கி வரும் ஆர் எம் எஸ் தபால் நிலைய இட பிரச்சினை குறித்து திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று எடுத்து கூறி சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கோரிக்கையை முன் வைத்தார். ரயில்வேதுறை அதிகாரிகளும் மயிலாடுதுறையில் ஆர் எம் எஸ் இயங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதமும் உறுதியும் அளித்துள்ளார்கள் பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர் சுதா அவர்களிடம் நாம் வைத்த முதல் கோரிக்கை வெற்றி! நன்றியும் மகிழ்ச்சியுடன் அ.அப்பர்சுந்தரம்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்