தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சூலூர் ஒன்றிய விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் மாநில இணை பொது செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது

தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சூலூர் ஒன்றிய விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் பாப்பம்பட்டி பிரிவு அருள்மிகு மகாலட்சுமி அம்மன் கோவிலில் நடைபெற்றது. தலைமை வழக்கறிஞர் விஜயகுமார் மாநில இணை பொதுச் செயலாளர், வரவேற்புரை கணேஷ் மாநகர் மாவட்ட இணைச் செயலாளர், முன்னிலை ஆனந்த் இன்ஜினியர் மாநகர் மாவட்ட துணைத் தலைவர், மாநகர் மாவட்ட பூசாரி பேரவை இணை அமைப்பாளர் சரவணன் மற்றும் மாநகர் மாவட்ட இணை செயலாளர் நகராஜ், மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணமாச்சாரி, இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் சபரிநாதன், இணை அமைப்பாளர் பிரவீன் குமார் நகர இளைஞரணி அமைப்பாளர் சபரி ஆகியோர் விழா குறித்து கருத்துகளை வழங்கினர் நன்றியுரை லீலா கிருஷ்ணன் ஒன்றிய இணைச் செயலாளர் தெரிவித்தார் இச்செயற்குழுவில் 1) சூலூர் ஒன்றியத்தில் 50 இடத்தில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து  சூலூரில் விஜர்சன ஊர்வல பொதுகூட்டம் நடத்தி குளத்தில் கரைப்பது. 2) விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ஆர்.ஆர் கோபால் தினமலர் வெளியீட்டாளருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் சூலூர் எம்எல்ஏ கந்தசாமி ஆகியோருக்கும் சிறப்பாக வரவேற்பளிப்பது. 3) அனைத்து கிளைகளிலும் செப்டம்பர் 7ம்தேதி காலையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமம் விளையாட்டுப் போட்டிகள் திருமந்திரம் ராமாயணம் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி கோல போட்டி அன்னதானமும் அனைத்து ஊர்களில் சிலை ஊர்வலம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்