சத்தியமங்கலம், அருள்மிகு. பண்ணாரிஅம்மன் திருக்கோவிலில், பக்தர்கள் 92,51,568 ரூபாய் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி நேர்த்திக்கடன்.


 ஈரோடு மாவட்டம்.சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் திருககோவிலில், மாதம் தோறும் உண்டியல்கள் திறக்க பட்டு, காணிக்கை எண்ணப்படும். அதன்படி,நேற்றுகோவில்வளாகத்தில் உள்ள20உண்டியல்கள்திறக்கப்பட்டு,  அருள்மிகு, பண்ணாரி அம்மன் கோவில் துணை ஆணையர் மேனகா பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் ஆகியோர் தலைமையில்,ஆய்வாளர் சிவமணி மற்றும் கோவில் பரம்பரை   அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல்,அமுதா, பூங்கொடி, கண்காணிப்பாளர்கள்  பால சுந்தரி, சங்கர் ஆகியோர் முன்னிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.


திருக்கோவில்.உண்டியலில், ரூபாய் 92,51,568 ரொக்கமாகவும், 342 கிராம் தங்கம், 875 கிராம் வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.இந்தஉண்டியல்எண்ணும் பணியில், சத்தியமங்கலம் வெற்றி நர்சிங் கல்லூரி மாணவிகள், மற்றும் பக்தர்கள்,தன்னார்வலர்கள்,கோவில் அலுவலகப்பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்