கொள்ளிடம் ஆதனூர் தடுப்பணை பணிகள் நிறைவு முன்னாள் எம்எல்ஏ ஜெக வீரபாண்டியன் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு பாராட்டு

கொள்ளிடம் ஆதனூர் தடுப்பணை பணிகள் நிறைவு முன்னாள் எம்எல்ஏ ஜெக வீரபாண்டியன் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு பாராட்டு 

மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமு கழக விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளருமான ஜெக வீரபாண்டியன் முன்னாள் எம்எல்ஏ கொள்ளிடம் ஆதனூர் தடுப்பணை கட்டி நிறைவுற்ற பணிகளை பார்வையிட்டு சுமார் 390 கோடி மதிப்பீட்டிலான பணிகளை மேற்கொண்ட பொதுப்பணித்துறை நீர்வள செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகளை பாராட்டினார். விரைவில் கொள்ளிடம் ஆதனூர் தடுப்பணை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. நம்முடைய காவிரியில் வருகின்ற தண்ணீர் கொள்ளிடத்தில் வந்து கடலில் வீணாக கலப்பதை பெருமளவிற்கு இத்தடுப்பணை தடுத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் இதர வாய்க்கால்கள் கால்வாய்கள் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு சென்றடையவும் நல்வழி பிறந்துள்ளது. இந்த தடுப்பணை அமைய பல்வேறு கட்டங்களில் அரசின் கவனத்தை ஈர்த்த அனைத்து தரப்பு இயக்க, கட்சிகளின் நண்பர்களுக்கு நன்றியினை தமிழ்நாட்டின் அனைத்து விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்து மகிழ்கின்றோம். இவ்வாறு ஜெகவீரபாண்டியன் முன்னாள் எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தார்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!