சத்தியமங்கலம் கொமாரபாளையம் ஊராட்சியில், தூய்மையே சேவை இயக்க விழிப்புணர்வு பேரணி.


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மை பாரத இயக்கம்( ஊரகம்) பகுதி- 2, தூய்மையே சேவை இயக்கம் - 2024, திட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் ஒழிப்பு, திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவக்குமார் தலைமை தாங்கினார், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உமாசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார், ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன் முன்னிலை வகித்தார்.



நிகழ்ச்சியில்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் வகாப், ராதாமணி, ஊராட்சி மன்ற துணை தலைவர் ரமேஷ், வார்டு உறுப்பினர் கள்:- சுகுமார் வடிவேலு,சாவித்திரி ரங்கராஜ், வளர்ச்சிக் குழு உறுப்பினர் ராசு, மற்றும் கல்லூரி துறை தலைவர் கள், பேராசிரியர்கள்,திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர், கல்லூரி யில் பயிலும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர்கள் ஆங்காங்கே உள்ள குப்பைகளை சேகரித்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒப்படைத்தனர், பேரணி அரசு கலைக் கல்லூரி முதல் ஊராட்சி மன்ற அலுவலகம் வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பேரணியாக அணி வகுத்து தூய்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, குறித்த பதாகைகள் ஏந்தி அணி வகுத்து சென்றனர், முடிவில் ஊராட்சி செயலர் ஆர். குமார் நன்றி கூறினார்.




Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்