சரஸ்வதி பூஜை முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பூஜைக்கான 12 வகையான தொகுப்புகள் அடங்கிய பொருள்களை பிரஸ் கிளப் நிர்வாகிகள் வழங்கினர்.

சரஸ்வதி பூஜை  முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் ஆண்டுதோறும்  பூஜை செய்வது வழக்கம் இதில் அனைத்து பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டு  சிறப்பிப்பார்கள். அதன்படி அக்,1 நாளை நடைபெறும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு  பிரஸ் கிளப்  அலுவலகத்தில் சிறப்பு பூஜை  நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில். இன்று  தூத்துக்குடி பிரஸ் கிளப்  உறுப்பினர்கள் அனைவருக்கும்  சரஸ்வதி பூஜையை சிறப்பாக  கொண்டாடும் விதமாக தூத்துக்குடி  பிரஸ் கிளப் நிர்வாகம்  சார்பில்  

அச்சு வெல்லம், பச்சரிசி, கொண்டைக்கடலை,  பொரி,அவல், பொரிகடலை, ஏலக்காய், முந்திரி, கிறிஸ்மஸ் பழம், சந்தனம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட பூஜைக்கான 12 வகையான தொகுப்புகள் அடங்கிய பொருள்களை பிரஸ் கிளப் நிர்வாகிகள் மன்ற உறுப்பினர்களுக்கு இன்று வழங்கினர்.

தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார், ஆகியோர் தலைமையில்  கௌரவ ஆலோசகர்கள், அன்பழகன், அருண், ஆத்திமுத்து ஆகியோர் முன்னிலையில்  உறுப்பினர்கள் அனைவருக்கும் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமன் 

மாரி ராஜா, கண்ணன், லட்சுமணன், இருதயராஜ்  மற்றும் உறுப்பினர்கள் ஜாய்சன், ராமச்சந்திரன், கற்பகநாதன், இசக்கி ராஜா, மாரிமுத்து, பாலகிருஷ்ணன், ரமேஷ், சேகர், சூர்யா, சந்தன ரமேஷ், முத்துக்குமார், அருள்ராஜ், நடராஜன், கார்த்திகேயன், ஜெயராமன், நீதி ராஜன், மாணிக்கம், செய்யது அலி சித்திக், உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு  சிறப்பித்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!