கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.!
கடந்த 30.08.2025 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட முறப்பநாடு பக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் சின்னதம்பி(28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (29.09.2025) முறப்பநாடு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
