தூத்துக்குடி: 2 பெண்களிடம் 6½ பவுன் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

 

File Photo

தூத்துக்குடி ரஹ்மத்துல்லா புரத்தைச் சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி அமுதா (41) இவர் நேற்று இரவு 9.50 மணியளவில் அங்குள்ள ஒரு கடையில் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது மோட்டார் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த சுமார் 28 வயது மதிக்கப்பட்ட ஒரு வாலிபர் அமுதா கழுத்தில் அணிந்திருந்த  3½ பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றுவிட்டார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா கூச்சலிட்டுள்ளார். ஆனால் அதற்குள் அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து அமுதா மத்திய பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு டெலிபோன் காலனியைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி கிறிஸ்டி (30). இவர் நேற்றிரவு 9.30 மணிக்கு டியூஷனில் இருந்து மகனை அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் கிறிஸ்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றுவிட்டார். 

இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருக்ன வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் மர்ம நபர் நகை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!