மாணவிக்கு பாலியல் தொல்லை: 69 வயது பங்குத்தந்தை போக்சோ சட்டத்தில் கைது!
ஏரல் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பங்குத்தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்ட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஒத்தாசை மாதா ஆலயத்தின் பங்குத்தந்தையாக இருப்பவர் பன்னீர்செல்வம் (வயது 69). இவர் ஆலயத்தில் பயிற்சி பெற வந்த 17வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் பன்னீர்செல்வம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
