பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக திருப்பூர் தொழிலாளர் போர்வையில் வங்கதேச தீவிரவாதிகள்... பொறிவைத்து தூக்கிய கியூ பிராஞ்ச் போலீஸ்!
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக திருப்பூர் தொழிலாளர் போர்வையில் வங்கதேச தீவிரவாதிகளை பொறிவைத்து தூக்கிய கியூ பிராஞ்ச் போலீசார், அவர்களிடமிருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம்கார்டுகளை கைப்பற்றினர்.
அந்த நபர்கள் யாரென்று ஆய்வு செய்த போது திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரிய வந்தது.அவர்களை மடக்கி பிடிக்க டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் திருப்பூர் வந்தனர். பின்னர் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் முகாமிட்டு விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இன்று அதிகாலை ஊத்துக்குளி பகுதியில் பதுங்கியிருந்த 2பேர், பல்லடத்தில் 3பேர், திருமுருகன்பூண்டியில் ஒருவர் என 6பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 6 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூருக்கு வந்த அவர்கள் பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளனர்.
ஏற்கனவே வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் தொழிலாளர்கள் போர்வையில் போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் திருப்பூருக்கு வந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
திருப்பூர் போலீசார் தொடர்ந்து அதிரடி ஆய்வு நடத்தி போலி ஆவண ங்களுடன் தங்கியிருக்கும் வங்காளதேசத்தினரை கைது செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் 6பேர் திருப்பூரில் தங்கியிருந்து பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூகவலை தளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களிடம் இருந்து 8 செல்போன்களையும் 16 சிம்கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
