கோரம்பள்ளம் காலங்கரைப் பகுதியில் சுய-கணக்கெடுப்பு உதவி முகாமில் தூத்துக்குடி கல்லூாி மாணவிகள் உதவி!.
தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியின் கணிதத் துறையின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, துறைத் தலைவர் குழந்தை தெரஸ் வழிகாட்டுதலில் கோரம்பள்ளம் காலங்கரைப் பகுதியில் சுய-கணக்கெடுப்பு உதவி முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இரண்டாம் ஆண்டு கணிதத் துறை மாணவிகள் கிராம மக்களுக்கு வீடு வீடாகச் சென்று பயனாளிகள் இணையவழி சுய-கணக்கெடுப்பு நடைமுறையை நிறைவு செய்ய உதவும் வகையில், தங்கள் கைபேசிகள் மற்றும் இணைய வசதிகளைப் பயன்படுத்தி குடும்ப விவரங்களைச் சரியாகப் பதிவு செய்ய மற்றும் சுய-கணக்கெடுப்பு விவரங்களை சமர்ப்பிக்க உதவி செய்தனர். மேலும், கணக்கெடுப்புக்குத் தேவையான ஆவணங்கள், தனிப்பட்ட விவரங்கள் மற்றும் துல்லியமான தகவல்களை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்த சந்தேகங்களையும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.
