கோரம்பள்ளம் காலங்கரைப் பகுதியில் சுய-கணக்கெடுப்பு உதவி முகாமில் தூத்துக்குடி கல்லூாி மாணவிகள் உதவி!.

தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியின் கணிதத் துறையின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, துறைத் தலைவர் குழந்தை தெரஸ் வழிகாட்டுதலில் கோரம்பள்ளம்  காலங்கரைப் பகுதியில் சுய-கணக்கெடுப்பு உதவி முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இரண்டாம் ஆண்டு கணிதத் துறை மாணவிகள் கிராம மக்களுக்கு வீடு வீடாகச் சென்று பயனாளிகள் இணையவழி சுய-கணக்கெடுப்பு நடைமுறையை நிறைவு செய்ய உதவும் வகையில், தங்கள் கைபேசிகள் மற்றும் இணைய வசதிகளைப் பயன்படுத்தி குடும்ப விவரங்களைச் சரியாகப் பதிவு செய்ய மற்றும் சுய-கணக்கெடுப்பு விவரங்களை சமர்ப்பிக்க உதவி செய்தனர். மேலும், கணக்கெடுப்புக்குத் தேவையான ஆவணங்கள், தனிப்பட்ட விவரங்கள் மற்றும் துல்லியமான தகவல்களை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்த சந்தேகங்களையும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி