தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு பேரணியை ஆணையா் ப்ரியங்கா தொடங்கி வைத்தாா்..!
தூத்துக்குடி தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆகஸ்ட் 1 முதல் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ல் சுய கணக்கெடுப்பு குறித்ததான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ப்ரியங்கா துவக்கி வைத்தார்
நிகழ்ச்சியில் உதவியாட்சியர் (பயிற்சி), துணை ஆணையர், மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
