தூத்துக்குடி குரூஸ்புரம் கோபுர மின்விளக்கு கம்பத்தின் மீது நள்ளிரவில் வாகனம் மோதியதால் "சாய்கோபுரமாக" மாறிய மின் கம்பம் - நடவடிக்கை எடுக்க பகுதி மக்கள் கோரிக்கை.!
தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பாக குரூஸ்புரம் 5 வழிச்சாலையில் அமைக்கப்பட்டு இருந்த கோபுர மின்விளக்கு கம்பத்தின் மீது நள்ளிரவில் வாகனம் மோதியதால் "சாய்கோபுரமாக" மாறி நிற்கிறது.இது ஒரு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்க கூடிய அளவில் மெயின் சாலையில் கேட்பாரற்று கிடக்கிறது.
மின்சாரம் சம்பந்தப்பட்ட விவகாரமாக இருப்பதால் உயிர் பாதுகாப்பு அவசியமாகிறது. ஆ தலால் இதை சரி செய்யக்கூடிய முன்னெடுப்பை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் செய்யுமாறு அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கும், மின்சார வாரியத்திற்க்கும் இதை கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
