"முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தவெக அன்று எதிா்ப்பு இன்று ஆதரவு, உப்பு தொழிலை அழிக்க இரண்டு கையால் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள்"- நாடா்கள் கூட்டமைப்பு கடும் தாக்கு
தூத்துக்குடி போல்பேட்டை 60 அடி சாலையில் உள்ள சான்றோர் குல கூட்டமைப்பு அலுவலகத்தில் வைத்து நாடார் அனைத்து அமைப்புகளின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வழக்கறிஞர் சிலுவை தலைமை தாங்கினார் சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ் முன்னிலை வகித்தார் மற்றும் பல்வேறு நாடார் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் அற்புதராஜ் கூறுகையில் நாம் சாப்பிடுகின்ற உணவுக்கு உப்பு தான் முக்கியம் உப்புக்கு நன்றி தான் மறு பெயர் உப்பிட்டவரை உள்ளளவு நிலை என்பார்கள் அதுபோல உப்பு உற்பத்தியில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்ற மாவட்டம் தூத்துக்குடி தான் இங்கு உள்ள முள்ளக்காடு. பொட்டல் காடு. புல்லாவழி. கோவங்காடு பழையகாயல் கோவளம் ஆகிய கிராமத்தில் உள்ள உப்பளங்களை அழித்துவிட்டு அந்த தொழிலில் உள்ள ஐம்பதாயிரம் பேர் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் ஜெனிவா நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு கப்பல் கட்டும் தளம் அமைக்க தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது கடந்த திமுக ஆட்சியில் அதற்கான முயற்சி மேற்கொண்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. அப்போதைய அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரிடம் முறையிட்டு அந்த கப்பல் கட்டு தளத்தை நிறுத்தி வைக்கப்பட்டது ஆனால் தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ளது கடந்த ஆண்டு உப்பு உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் முத்தையாபுரம் பகுதியில் போராட்டம் நடத்தும்போது தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு மக்களோடு தான் நாங்கள் இருப்போம் கடைசி வரை இங்கு கப்பல் கட்டும் தளம் அமைக்க விடமாட்டோம் என்று கூறினார்கள் தற்போது தமிழகத்தில் தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்த உடன் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கப்பல் கட்டு தளம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். மக்கள் தன்னிச்சையாக தற்போது போராடி வருகின்றனர் கடந்த இரண்டாம் தேதி முள்ளக்காடு பகுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் மீது காவல்துறையினா் வழக்கு பதிவு செய்துள்ளனர் உடனடியாக வழக்கை வாபஸ் பெற வேண்டும் ஸ்டெர்லைட் போராட்டத்தை எப்படி விரட்டி அடித்தோமோ அதுபோல கப்பல் கட்டுதளத்தையும் விரட்டி அடிப்போம் உப்பளத்தை அழித்து கப்பல் கட்டுதளம் அமைக்க ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் மக்கள் ஒன்று திரண்டு போராடுவோம் வரும் 10 நாட்களுக்குள் இதற்கான தீர்வு காணாவிட்டால் மக்கள் அனைவரும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார் மேலும் அமைச்சர் ஸ்ரீநாத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறுகின்றனர் அவர் எப்போதுமே தொடர்பு கொள்ள முடியாத நிலைமையில் தான் இருக்கிறார் என்று கூறினார் மேலும் தமிழக வெற்றி கழகம் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு முன்பு வரை கப்பல் கட்டுதளத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஆட்சி அமைந்த உடன் கப்பல் கட்டு தளத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறது ஏன் இந்த மன மாற்றம் என்று தெரியவில்லை என அற்புதராஜ் கூறினார்
வழக்கறிஞர் சிலுவை கூறுகையில் 5 கிராமங்களை உள்ளடக்கிய 5000 ஏக்கர் உப்பளம் உள்ளது உப்பு உற்பத்தியில் இங்கு தான் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது இங்கு உற்பத்தி செய்யப்படுகிற உப்புதான் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது மற்ற பகுதிகளில் தயாரிக்கப்படுகின்ற உட்பு தொழிற்சாலைகளுக்குத் தான் அனுப்பப்பட்டு வருகிறது அந்தப் பகுதியில் கப்பல் கட்டு தளம் கட்டக் கூடாது 1800 ஏக்கருக்கு மேல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு கப்பல் கட்டு தளம் அமைக்க விடமாட்டோம் என்று கூறினார்கள் ஆனால் தற்போது நிலைமை மாற்றிக்கொண்டு கப்பல் கட்டு தளம் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன அப்போது ஒரு கை மண்அள்ளி போட்டார்கள் தற்போது தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இரண்டு கையால் மண்அள்ளி போடுகிறார்கள் ஏன் இந்த மன மாற்றம் என்று தெரியவில்லை தமிழக அரசு உடனடியாக கப்பல் கட்டு தளம் அமைக்கும் முடிவை மாற்றாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் ஆரம்பத்தில் தொடர்பு எல்லையில் இருந்த அமைச்சர் ஸ்ரீநாத் தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டார் மக்கள் கூட அவரை சந்திக்க முடியாத சூழ்நிலைதான் உள்ளது என்று வழக்கறிஞர் சிலுவை கூறினார்.
பேட்டியின் போது பெருந்தலைவா் மக்கள் நலச்சங்க தலைவர் மாாியப்பன், மகாஜன சங்க தலைவர் பாலகிருஷ்ணன், காமராஜா் லட்சிய பேரவை தலைவர் பிரச்சன்ன குமாா், நாடாா் சங்க தலைவர் சிவா, பாண்டியனாா் மக்கள் இயக்க தலைவர் டேவிட், நாடாா் பேரவை தலைவர் அருண்சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்
