"தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்காக இரவாக இருந்தாலும் பகலாக இருந்தாலும் பணி செய்வது எங்களது கடமை" -இரு சக்கர வாகனத்தில் உலா வந்து ஆய்வு செய்த மேயா் ஜெகன் பொியசாமி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வாா்டுகளிலும் அரசியல் பாரபட்சமின்றி தேவையான கட்டமைப்பு பணிகள் முழுமையாக ஏற்கனவே நடைபெற்றுள்ளது. ஒரு சில பணிகளும் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு கோடைகால பருவமழை சற்று குறைவு ஏற்பட்டதால் மாநகராட்சி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. வல்லநாடு ஆற்றுப்படுகையில் குடிதண்ணீாின் அளவு கடுமையாக குறைந்துள்ளது.

இருந்த போதிலும் மாநகராட்சி பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது ஆனால் பல பகுதிகளுக்கு குடிநீர் வரவில்லை என்று பொதுமக்கள் ஒரு புறம் போராட்டம் மற்றொருபுறம் பாதி அளவுக்கு குடிநீர் வருகிறது மீதி பாதியளவு குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வரவில்லை என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 19வது வார்டு கேவிகே நகர். மகிழ்ச்சிபுரம். பக்கிள் ஓடை ஒட்டிய அண்ணாநகர் பகுதி மற்றும் நான்காம் ரயில்வே கேட் பகுதிகளில் குடிநீர் வரவில்லை என்று பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி இரவில் இருசக்கர வாகனத்தில் டாா்ச் லைட்டுடன் உடனடியாக 19வது வார்டுக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நடு இரவில் இருசக்கர வாகனத்தில்இரவு 9 மணி முதல் 12 மணி வரை  3 மணி நேரம் தெருத்தெருவாக சென்று அப்பகுதி பொதுமக்களிடம் குடிநீர் தொடர்பான விபரங்களை கேட்டறிந்தார். மேலும் ஒவ்வொரு வீடாக சென்று குடிநீர் வருகிறதா வரவில்லையா என்று மேயர் ஜெகன் பொியசாமி ஒவ்வொரு வீடாக சென்று பார்வையிட்டார். 

அதன்பிறகு அந்த பகுதி பொது மக்களிடம் மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் உங்களுடைய பகுதியில் குடிநீர் வரவில்லை என்ற விவரங்களை கூறியுள்ளீர்கள் நானும் ஒவ்வொரு வீடாக சென்று பார்வையிட்டு உள்ளேன் தற்போது உடனடியாக குடிநீர் வராத தெருக்களுக்கு லாரி மூலம் குடிநீர் உடனடியாக சப்ளை செய்யப்படும் அது போல குடிநீர் பிரச்சனைக்கு தற்காலிகமாக தீர்வு காணப்பட்டு உங்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அது போல புதியதாக பைப் பதிக்கப்பட்டு அதன் மூலம் அதிலிருந்து குடிநீர் உங்களுக்கு வழங்கப்படும் இந்தப் பணியில் ஒரு வார காலத்திற்குள் முடிக்கப்பட்டு நிரந்தரமாக குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் அதுவரை பொறுத்துக் கொள்ளவும். அதற்காக குடிநீர் வராமல் இருக்காது உங்களுக்கு குடிநீர் தொடர்ந்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய பைப் பதிப்பதற்கான பணி உடனடியாக துவங்கப்படும் மக்களுக்காக தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இரவாக இருந்தாலும் பகலாக இருந்தாலும் மக்களை சந்திப்பதும் கோாிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவது தான் எங்களது கடமை எந்த நேரமும் என்னை தொடா்பு கொண்டு பேசலாம் மாநகராட்சி சம்பந்தப்பட்ட எந்த கோாிக்கையாக இருந்தாலும் பேசலாம் என்று அப்பகுதி பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பொியசாமி கூறினார். 

ஆய்வின் போது பகுதி செயலாளா்கள் ரவீந்திரன், சுரேஷ்குமாா்,  மாநகர இளைஞர் அணி துைண அமைப்பாளர் செல்வின், கவுன்சிலா் கனகராஜ், சோமசுந்தாி, கந்தசாமி, வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.  


பொதுமக்கள் வைத்த கோரிக்கையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி இரவு 9 மணி முதல் நடு இரவு 12 மணி வரை மூன்று மணி நேரம் இரு சக்கர வாகனத்தில் தெருத்தெருவாக சென்று குடிநீர் பிரச்சனையை கேட்டுறிந்தார். ஆனால் ஒரு சில பகுதிகளில் குடிநீர் தங்கு தடை என்று வந்தாலும் ஒரு சில மாநகர் பகுதிகளில் தொடர்ந்து குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது அதன்படி ஆங்காங்கே சில போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மாநகர் மக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பொியசாமி தொடர்ந்து அதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறார் பொதுமக்கள் கோரிக்கை வைத்தவுடன் 3 மணி நேரம் இரு சக்கர வாகனத்திலேயே மேயர் ஜெகன் பொியசாமி வீதி உலா வந்தது அப்போது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி