“இன்றைய தினமே உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட வேண்டும்” - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
தஞ்சை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இன்றைய தினமே விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட வேண்டும். விசாரணையை நாளை வரை கொண்டு செல்லக் கூடாது. அதேபோல், விசாரணைக்கு உதயநிதி ஸ்டாலின் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என முன் ஜாமீன் மனு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உதயநிதி ரிமாண்ட் செய்யப்பட மாட்டார். விசாரணைக்கு மட்டுமே அவர் அழைத்துச் செல்லப்படுகிறார் என உயர்நீதி மன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் பதில் தாக்கல் செய்துள்ள நிலையில்,
தமிழ்நாடு அரசு வழக்கறிஞரின் உறுதிமொழியை ஏற்று, திமுக தாக்கல் செய்த அவசர வழக்கை முடித்து வைத்தார் உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன்..
