Posts

தூத்துக்குடி வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு- அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அறிக்கை!

Image
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வழியாக வருகை தரவுள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். வரும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்குதல், முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தல் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.  இதற்காக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் அவர் விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். தூத்துக்குடி விமான நிலையம் வரும் முதலமைச்சருக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கட்சியின் அனைத்து அணி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ...

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு 300 பேருக்கான சிறப்பு அன்னதானம்- முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் துவங்கி வைத்தார்.!

Image
  மறைந்த தமிழக முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் கல்வி குமார் ஏற்பாட்டில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக  செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ  பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் 2026ல் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  தூத்துக்குடி சிவன் கோவில் நடைபெற்ற 300 பேருக்கான சிறப்பு  அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் துவங்கி வைத்தார்.  இந்நிகழ்வில் மாநில அமைப்பு சாரா ஓட்டுரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், தூத்துக்குடி மண்டல அண்ணா தொழிற்சங்கஇணைச் செயலாளர் லட்சுமணன்,  துணைத் தலைவர் பார்வதி,  மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள்  பாசறை செயலாளர்  தனராஜ்,மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ்,மாவட்ட அண்ணா...

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியா? தூத்துக்குடியில் பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி.!

Image
  தூத்துக்குடி, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சரவண பெருமாளின் 9 வது ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் தூத்துக்குடி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்...தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தன் மீது (அமைச்சர் கே.என்  நேரு) கலங்கம் இருக்கின்றது என்று நீதிமன்றம் சொன்ன பின்பு அவர் வழக்கை எதிர் கொள்ள தயாராக இருந்திருக்க வேண்டும். அல்லது தமிழக முதல்வர் இந்த வழக்கு இருப்பது தெரிந்து அவரை தற்காலிகமாக பொறுப்பில் இருந்து விடுவித்து வழக்கை நடத்துவதற்கு எதுவான ஒரு நிலையை உருவாக்கி இருக்க வேண்டும். இல்லையென்றால் பொது வாழ்க்கையில் தூய்மை நேர்மை என்று சொல்ல அர்த்தமற்று போய்விடும்.  திமுக 1967 இல் ஆட்சிக்கு வந்த முதல் களங்கம் இல்லாத ஒரு அரசாங்கத்தை தந்ததே கிடையாது. அது இந்த ஆட்சியில் நிரூபித்து நீதிமன்றம் கூறியிருக்கின்றது. அது நிரூபிக்கப்படும் என்று நானும் நம்புகின்றேன்.   செக்யூரிஸம் என்று சொன்னால் வாய் திறந்து பேசவே முடியாது. நாடு முழுக்க இருக்கக்கூடிய ஜெய்ஹிந்த்  செண்பகராமன்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு நேரடியாக, மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக தேர்தலில் பிரச்சாரம்- தூத்துக்குடியில் மீண்டும் புயலை கிளப்பும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர்.!

Image
  தூத்துக்குடியில்,  மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை பசுமை காப்பர் என்ற பெயரில் திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி, தமிழ் சாலையில் உள்ள பிரஸ் கிளப்பில் வைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூறும் போது, தூத்துக்குடியில் நீர், நிலம், காற்று அனைத்தையும் மாசுபாடாக்கி பொது மக்களின் தன் எழுச்சியான போராட்டம் காரணமாக 11 உயிர்கள் பலியாகினர். பின்னர், உச்ச நீதிமன்றம் மூலம் ஸ்டெர்லைட்ஆலை மூடப்பட்டது.  இந்த நிலையில், தற்போது மீண்டும் ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை காப்பர் என்ற பெயரில் மீண்டும் தூத்துக்குடியில் நுழைவதை ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருபோதும் அனுமதிக்காது.. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து  போராட்டங்கள் நடைபெறும்.  ஆகவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை அமைய அனுமதி அளிக்கக்கூடாது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது தூத்துக்குடியில் வாழ்வாதாரம் பாதிக்கப்படவில்லை. வியாபாரிகள், மீனவர்கள் தொடர்ந்து ஸ்டெர்லைட...

தூத்துக்குடியில் பள்ளி, ரேஷன்கடை, விளையாட்டுதிடல், பக்கிள் ஓடை விாிவாக்கம் கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தாா். அமைச்சா் கலெக்டா், மேயா், ஆணையா் பங்கேற்பு.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு கலெக்டா் இளம்பகவத் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி, ஆணையா் ப்ாியங்கா ஆகியோா் முன்னிலையில் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கனிமொழி எம்பி, செல்சீனி காலனி மற்றும் திரவியரத்தின நகர் நியாயவிலை ஆகிய இருகடைகள் தலா 10 லட்சம் மதிப்பீல் மற்றும் என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் சமூக பொறுப்பு நிதியில் ரூபாய்.94.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரை தளம் மற்றும் முதல் தளம் கொண்ட அதிநவீன கழிப்பறை கட்டிடம் ஆகியவற்றினை திறந்து வைத்தார். பின்னா் மாநகராட்சிக்குட்பட்ட 35வது வாா்டு தேவகி நகர் சிறுவர் விளையாட்டு பூங்காவினை மாற்றுத்திறனாளிகள் பூங்காவாக மாற்றுவது தொடர்பாக பார்வையிட்டார். அதனைதொடா்ந்து வி.வி.டி சாலை பண்டுகரை சாலை சந்திப்பு 4ம் ரயில்வே கேட் ஓடை பாலம் அருகில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணிக்கான அடிக்கல்லை நாட்டி பணியினை துவக்கி வைத்தார். எஸ்.கே.எஸ்.ஆர் காலனி, எழில் நகர் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும...

தூத்துக்குடி கடலில் மூழ்கிய விசைப்படகு: 40 லட்சம் இழப்பு -9 போ் பத்திரமாக கரைசோ்ந்தனா்.!

Image
  தூத்துக்குடி புது தெருவை சேர்ந்தவர் சுபாஷ். இவருக்கு சொந்தமான விசைப்படகு தூத்துக்குடி  மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சுபாஷுக்கு சொந்தமான விசைப்படகில் 9 பேர் அதிகாலை 5 மணிக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர் .மீன்பிடித்து விட்டு இரவு கரைக்கு திரும்பி கொண்டு இருந்தனர் அப்போது தூத்துக்குடியில் இருந்து 16 மைல் தொலைவில் வரும் போது விசைப்படகு எஞ்சின் பொருத்தப்பட்டிருந்த பகுதி அருகே திடீரென்று விசைப்படகில் ஓட்டை விழுந்தது. இதனால் விசைப்படகுக்குள் கடல் நீர் சலசலவென உள்ளே புகுந்துள்ளது. உடனடியாக மீனவர்கள் படகில் ஏற்பட்ட ஓட்டையை அடைக்க முயற்சி செய்தனர், ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் விசைப்படகு தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் படகிலிருந்து கடலில் குதித்து தத்தளித்து கொண்டிருந்தார்கள். அப்போது அந்தவழியாக வந்த மற்ற விசைப்படகுகள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 9 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.  அதன் பிறகு விசைப்படகு மூலம் கயிறு கட்டி கடலில் மூழ்கிய விசைப்படகை இழுத்த...

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக திருப்பூர் தொழிலாளர் போர்வையில் வங்கதேச தீவிரவாதிகள்... பொறிவைத்து தூக்கிய கியூ பிராஞ்ச் போலீஸ்!

Image
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக  திருப்பூர் தொழிலாளர் போர்வையில் வங்கதேச தீவிரவாதிகளை பொறிவைத்து தூக்கிய கியூ பிராஞ்ச் போலீசார், அவர்களிடமிருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம்கார்டுகளை கைப்பற்றினர்.  சமூகவலைதளங்களில்  பயங்கரவாத அமைப்பு களுக்கு ஆதரவாக   சிலர் கருத்துக்கள் பதிவிட்டு  வந்ததை  டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார்  கண்ட றிந்தனர். அந்த நபர்கள்  யாரென்று  ஆய்வு செய்த போது திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரிய வந்தது.அவர்களை மடக்கி பிடிக்க      டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார்  திருப்பூர் வந்தனர்.  பின்னர்    திருப்பூர்  மாநகர் மற்றும் மாவட்ட   போலீசார் உதவியுடன்  முகாமிட்டு  விசாரணையை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள்  திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம்,  திருமுருகன்பூண்டி பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இன்று அதிகாலை  ஊத்துக்குளி பகுதியில்  பதுங்கியிருந்த  2பேர், பல்லடத்தில்  3பேர்,  திரு...