திருவண்ணாமலை அருகே தந்தை சரமாரி வெட்டிக் கொலை - மகன் கைது

திருவண்ணாமலை அருகே தந்தையை சரமாரி வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த வெறையூர் அருகிலுள்ள அரடாப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (65) விவசாயி இவரது மனைவி வேடியம்மாள் (55) இவர்களுக்கு முருகன் (40) லட்சுமணன் (38) சேகர் (36) ஆகிய 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இவர்களுக்கு சேகர் மனைவி சத்யா (30) கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து கெங்கம்பட்டு கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். இதனால் தனது 3 மகள்களை சேகர் கவித்து வருகிறார். இந்நிலையில் மனைவி பிரிந்துசென்றதற்கு நீங்கள்தான் காரணம் என்று கூறி தந்தை பெருமாளிடம் அடிக்கடி சேகர் தகராறு செய்வாராம். இதேபோல் நேற்று முன்தினம் இரவும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்து கத்தியை எடுத்து தந்தை பெருமாளை சரமாரி வெட்டியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சேகர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெறையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வீட்டில் பதுங்கியிருந்த சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் தந்தையை மகனே சரமாரி வெட்டிக்கொலை செய்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!