அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.



ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள முருகன் புதூர் பெண்கள் மேல்நிலை பள்ளி , நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி, மொடச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி,பழனியம்மாள் மேல்நிலை பள்ளி, வைரவிழா மேல்நிலை பள்ளி ஆகிய பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.நிகழ்ச்சியானது கலெக்டர்  கதிரவன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி, கோட்டாட்சியர் ஜெயராமன், ஆவின் தலைவர் காளியப்பன், முன்னாள் சேர்மன் கந்தவேல்முருகன்,சொசைட்டி தலைவர் காளியப்பன், பிரினியோகணேஸ், செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்