நஞ்சை கொளாநல்லி ஊராட்சி கிராம சபா கூட்டம்!!

நஞ்சை கொளாநல்லி ஊராட்சி கிராம சபா கூட்டம் நடைபெற்றது.



ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் நஞ்சை கொளாநல்லி ஊராட்சி கிராம சபா கூட்டம் நஞ்சை கொளாநல்லி ஊராட்சி சத்திரப்பட்டி பொதுகளம் அருகில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொடுமுடி வட்டாட்சி வளர்ச்சி அலுவலர் சக்திவேல்,  கொளாநல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சோமசுந்தரம், கொடுமுடி ஒன்றிய பெருந்தலைவர் லட்சுமி ராஜேந்திரன், கொளாநல்லி ஊராட்சி மன்ற தலைவர் பேபி செந்தில்குமார்,  துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் (எ) சின்ன நவநீதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயல் அலுவலர் சுதா மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர். கிராமசபா கூட்டம் முடிவில் மகாத்மா காந்தியின் கனவு நிறைவேறிட தொழுநோய் இல்லாத உலகத்தை படைப்போம் என கொடுமுடி சுகாதார ஆய்வாளர் பி.டி. தங்கவேல் முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்