கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை.. 5 ஊராட்சிகளில் நிவாரணப் பொருட்கள்அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி நம்பியூர் ஒன்றியதிற்கு  உட்பட்ட எம்மாம்பூண்டி , ஒழலக்கோயில், அஞ்சானூர், வேமாண்டம்பாளையம், லாகம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்ச்சியாக தூய்மை பணியாளர்கள்,  துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் போன்ற வற்றை தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.  செங்கோட்டையன் வழங்கினார்.


மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் முதியோர்களுக்கு புதிய ரேசன் கார்டு மற்றும் முதியோர் உதவி தொகை வழங்கினர். இதில் கோட்டாட்சியர் ஜெயராமன்,தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாவேசு, நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம்,மாவட்ட கவுன்சிலர் கௌசல்யா ஈஸ்வரமூர்த்தி, யூனியன் சேர்மன் சுப்பிரமணியம்,ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி மற்றும் துணைத் தலைவர் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!