தூயபனிமயமாதா பேராலய திருவிழா: பொதுமக்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம்

தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலயத்தின் 438 வது திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் தூயபனிமயமாதா திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஆலயம் எதிரில் உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.


கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாமெனவும் வீடுகளில் இருந்தே பிரார்த்தனை செய்யும்படியும் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் கேட்டு கொண்டதன்பேரில் கொடியேற்றம் பொதுமக்கள் பங்கேற்பில்லாமல் நடைபெற்றது.


தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலய திருவிழா இன்று துவங்கி வரும் ஆகஸ்டு 5 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.


தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலயத்தில் உள்ள பனிமயமாதா அன்னைக்கு இன்று பிற்பகல் 12 மணிக்கு பொன்மகுடம் பூட்டப்படுகிறது


திருவிழாவில் தினந்தோறும் நடைபெறும் சிறப்பு ஆராதனைகள் திருப்பலிகள் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் நடைபெறும் என ஏற்கனவே மறை மாவட்ட ஆயர் தெரிவித்து உள்ளார் .


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!