திருப்பூர் கொரோனா சித்த மருத்துவமனையில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

திருப்பூர் மாநகர் காங்கேயம் சாலையில் சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு கடந்த மாதம் 24ம் தேதி துவங்கப்பட்டது.



சித்த மருத்துவ முறையில் கொரோனா சிகிச்சை பெற விரும்பும் நபர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 12 நாட்களில் 74 பேர் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டு 4 வயது சிறுவன் உட்பட 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோயாளிக்கு மூலிகை தேனீர், தொண்டை சுத்தம், அதிமதுர நசியம், நொச்சி தைலம், ஆவி பிடித்தல், கபசுர குடிநீர் என சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும், தெரிவித்தனர்.  முழுமையாக குணமடைந்து வீடு திரும்பிய நோயாளிகளுக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கே.ஆர்.என்.ஹோமியோபதி  மருத்துவர் கலீல் ரஹ்மான் வழங்கினார். 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி