திருப்பூர் கொரோனா சித்த மருத்துவமனையில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

திருப்பூர் மாநகர் காங்கேயம் சாலையில் சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு கடந்த மாதம் 24ம் தேதி துவங்கப்பட்டது.



சித்த மருத்துவ முறையில் கொரோனா சிகிச்சை பெற விரும்பும் நபர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 12 நாட்களில் 74 பேர் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டு 4 வயது சிறுவன் உட்பட 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோயாளிக்கு மூலிகை தேனீர், தொண்டை சுத்தம், அதிமதுர நசியம், நொச்சி தைலம், ஆவி பிடித்தல், கபசுர குடிநீர் என சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும், தெரிவித்தனர்.  முழுமையாக குணமடைந்து வீடு திரும்பிய நோயாளிகளுக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கே.ஆர்.என்.ஹோமியோபதி  மருத்துவர் கலீல் ரஹ்மான் வழங்கினார். 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்