Posts

Showing posts from May, 2022

கொங்கு வேளாளர் பள்ளி பணி நிறைவு விழா

Image
திருப்பூர் கொங்கு வேளாளர் பள்ளியில் பணி நிறைவு விழா நடைபெற்றது. பள்ளி தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி தலைமை தாங்கினார்.  பொருளாளர் ஓ.கே.கந்தசாமி, செயலாளர் எஸ்.கோவிந்தப்பன்,  உப தலைவர்கள் முருகசாமி, குப்புசாமி, இணை செயலாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பள்ளி தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி பணிநிறைவு பெறும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை கவுரவித்து நினைவுப் பரிசுகள் வழங்கினார். 

ஏழை மாணவர்கள் முன்னேற திட்டங்களை தந்தவர் எடப்பாடியார்... முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு

Image
 பல்லடத்தில் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா பேருரையாற்றி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.  விழாவிற்கு கல்லூரி முதல்வர்  முனியன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்று பேசினார். கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகேயன் விளையாட்டுத்துறை ஆண்டறிக்கை வாசித்தார்.   இந்த விழாவில்  கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., பேசும்போது கூறியதாவது: கல்விதான் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்பதால் தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 10 ஆண்டுகளாக முதல்வர் பொறுப்பில் கல்விக்காக ஏராளமான திட்டங்களை வகுத்தார். தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் வளர்ச்சி பெறுவதை போல அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை வகுத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இதே வழியில் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் நல...

அரசுப்பள்ளி, கல்லூரி மாணவர்கள் முன்னேற திட்டங்களை தந்தவர் எடப்பாடியார்... முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு

Image
பல்லடத்தில் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா பேருரையாற்றி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.  விழாவிற்கு கல்லூரி முதல்வர்  முனியன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்று பேசினார். கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகேயன் விளையாட்டுத்துறை ஆண்டறிக்கை வாசித்தார்.   இந்த விழாவில்  கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., பேசும்போது கூறியதாவது: கல்விதான் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்பதால் தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 10 ஆண்டுகளாக முதல்வர் பொறுப்பில் கல்விக்காக ஏராளமான திட்டங்களை வகுத்தார். தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் வளர்ச்சி பெறுவதை போல அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை வகுத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இதே வழியில் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் நல்ல தி...

தூத்துக்குடியில் 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் ஓட்டிய 27 இரு சக்கர வாகனம் பறிமுதல்

Image
பெற்றோர்களை அழைத்து அறிவுரை வழங்கிய மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன்.! தூத்துக்குடியில் காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் 27 பேர் ஓட்டிய இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இரு சக்கர வாகனங்களை ஒட்டிய இளஞ்சிறார்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலாஜி சரவணன்  அறிவுரைகள் வழங்கி  18 வயது நிறைவடையாமல் வாகனம் ஓட்டக் கூடாது என்று எச்சரித்து மேற்படி பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக காவல்துறையினர் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவது 199 (a)ன் படி குற்றமாகும்.  மீறினால் மேற்படி இளஞ்சிறாருக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது. வாகனம் ஒரு வருட காலம் சிறை பிடிக்கப்படும். பெற்றோர்களுக்கு ரூபாய் 25,000/- முதல் ரூபாய் 1 லட்சம் வரை அபராதமும...

குடும்ப தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு கணவன் தப்பி ஓட்டம்

Image
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அடுத்த தெற்கு வாகைக்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (40) இவரது மனைவி ராமலட்சுமி (35) இத்தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகனும் 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர் திருப்பூரில் கார் மெக்கானிக்காக வேலை பார்க்கும் கல்யாண சுந்தரம் அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்  சில தினங்களுக்கு முன் அவர் குடும்பத்துடன் சொந்த ஊர் வந்த நிலையில் இன்று திடீரென்று ராமலட்சுமி அவரது வீட்டில் வைத்து மர்ம நபரால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்  இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் மானூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததின் பேரில் அங்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்  மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர் முதற்கட்ட விசாரணையில் கல்யாணசுந்தரம் தான் குடும்ப தகராறில் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது அதாவது கணவன் மனைவி இடையே பல மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்  திருப்பூரில் வைத்தும் இருவரும்...

ட்விட்டரில் சாதி பெயரை குறிப்பிட்டு கருத்து பதிவிட்டதாக அண்ணாமலைக்கு எதிராக புகார்!

Image
  ட்விட்டரில் சாதி பெயரை குறிப்பிட்டு கருத்து பதிவிட்டதாக அண்ணாமலைக்கு எதிராக புகார்! வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய கோரி நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் முருகன் என்பவர் அண்ணாமலைக்கு எதிராக புகார்! #Annamalai | #Caste | #BJP

திண்டுக்கல் : சமூக வலைதளங்களில் பாஜக செய்திகள பகிர்ந்து விஷமப் பிரச்சாரம் - காவலர் பணியிடை நீக்கம்.!

Image
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர்  சுரேஷ். இவர்  சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்துத்துவா  பற்றி வரும் செய்திகளை ஃபேஸ்புக் மூலம் பகிர்ந்ததால் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவு.

முதல்வர் ஆய்வின்போது செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய பாதுகாப்பு காவலர் - முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் இருந்து நீக்கி உடனடி நடவடிக்கை.!

Image
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த  முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஆரிஷ் மீது, பாதுகாப்பு காவலர் பத்திரிகையாளர் என்று கூறியும், அடையாள அட்டையை காட்டியும் நெஞ்சில் கைவைத்து தள்ளி தாக்குதல் நடத்தியது சர்ச்சையானது.  இது குறித்த புகார் முதலமைச்சருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்திய பாதுகாப்பு காவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து  முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் இருந்து குறிப்பிட்ட காவலர் நீக்கம் செய்து உத்தரவு பிறக்கப்பட்டது.

"முதலமைச்சரை சந்திக்க அனுமதி மறுப்பு, இறந்து விடலாம் என நினைகின்றேன்" - முகநூலில் நெல்லை கண்ணன் உருக்கம்.!

Image
"விருது விழாவில், இனி நீங்கள் கண் கலங்கி நான் பார்க்கக் கூடாது இனி நான் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வேன், என்னை நீங்கள் எப்போதும் அழைக்கலாம் என்றார்; இன்று ஒரு கடிதத்திற்கும் விடை இல்லை, நேரில் பேச அனுமதிக்கவில்லை; 79 வயதுக் கிழவன் நொந்துபோயுள்ளேன்; யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை; அவரது உதவியாளர் வெண்ணந்தூர் தினேஷ் அனுமதிக்கவே மறுக்கிறார்; இதனாலேயே இறந்து போகலாம் எனக் கருதுகின்றேன்..." என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நெல்லை கண்ணன் முக நூலில் உருக்கம்.

மத்திய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90% வேலை வழங்கிட வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AlYF) தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்.

Image
எங்கே எனது வேலை ? என்ற முழக்கத்துடன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர் பெருமன்றம் (AlYF) தமிழ்நாடு முழுவதும் இன்று (மே 31) முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகிறது . இதனையொட்டி தூத்துக்குடியில் இன்று காலை  11.00 மணியளவில் தந்தி அலுவலகம் முன்பு இளைஞர் பெருமன்றம் (AlYF) சார்பில் அதன்  மாவட்ட செயலாளர் தோழர். பெ.சந்தனசேகர் வழக்கறிஞர், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு மாநிலகுழு உறுப்பினர்  வழக்கறிஞர் P. சீனிவாசன், மாவட்டத்தலைவர், M.மணிகண்டன், மாவட்ட பொருளாளர் R.சிவராமன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை முன்னாள் மாநில செயலாளர் V.பாலமுருகன் துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் :- தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90% வழங்கிடவும், தமிழ்நாடு அரசு பணியிடங்களை தமிழக இளைஞர்களுக்கே முழுமையாக வழங்கீடவும், ஒன்றிய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பிடவும், பகத்சிங் தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு BNEGA சட்டத்தை நிறைவேற்றிடவும், ஓய்வு பெறும் அரசு பணியாளர்களின் வயது வரம்பு 60 ஆக உயர்த்தியதை மீண்டும் 58 ஆக மாற்...

2 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு - தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 மற்றும் 3ஆவது அலகுகளில் உற்பத்தி நிறுத்தம்.!

Image
2 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 மற்றும் 3ஆவது அலகுகள் மின் உற்பத்தி  நிறுத்தப்பட்டது. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, கடந்த சில மாதங்களாக 5 அலகுகளிலும் முழுமையாக மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. விசாகப்பட்டினத்திலிருந்து ஒரு லட்சம் டன் நிலக்கரி வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக, 5 அலகுகளிலும் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.  இந்நிலையில் இன்று 2 மற்றும் 3ஆவது அலகுகள் திடீரென இன்று நிறுத்தப்பட்டன. பராமரிப்பு பணி காரணமாக இரு அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், 2 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 அலகுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அலுவலர்கள் தரப்பில் தெரிவித்தனர்...

9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் ரத்து.!

Image
  வரும் கல்வியாண்டில் இருந்து 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் நிறுத்தம் நடப்பு கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு தமிழ்நாட்டில் 9ம மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட தொழிற்கல்வி பாடத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 200க்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. | #School | #Students | #TNSchool | #TNGovt | #Education | #Directorate | 

6 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்.!- 6 குழந்தைகளும் இறந்த நிலையில் பெண் உயிருடன் மீட்பு.!

Image
மகாராஷ்டிரா ' ராய்காட் மாவட்டம் மஹத் என்ற இடத்தில் நேற்று இரவு பெண் ஒருவர் தனது 6 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்தப் பெண்ணை உயிருடன் மீட்ட நிலையில் 6 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

"தலைமைக்கு தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம்" -அமைச்சராக்க தீர்மானம் குறித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை.!

Image
திண்டுக்கல் தி.மு.க கிழக்கு, மேற்கு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக மற்றும் பல்வேறு இடங்களிலும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று திமுகவினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், இது தொடர்பாக உதயநிதி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டங்களில் எனக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக் கழகத்திற்கு அனுப்பிவைத்திருப்பது குறித்து அறிந்தேன். என் தொடர் பணிகள் மீதும், முன்னெடுப்புகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நான் என்றென்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன். கழகம் வழங்கிய வாய்ப்பில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகத் தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள் பணியையும், கழகத் தலைவர் மற்றும் கழக முன்னோடிகளின் வழிகாட்டுதலில் கழக இளைஞர் அணியின் செயலாளராகத் தமிழகம் முழுவதும் பயணித்து, சுழகப் பணியையும் என்னால் இயன்றவரைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். கழகத்தை...

ஐ.ஏ.எஸ்., தேர்வில் கோவை மாணவிகள் சாதனை!

Image
.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு கடந்த ஜன., யிலும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வு கடந்த ஏப்., மாதமும் நடந்தது. இறுதி தேர்வு முடிவுகள் இன்று(மே 30) வெளியிடப்பட்டது. அதில், 685 பேர் தேர்ச்சி பெற்றனர். கோவையை சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீ தேசிய அளவில், 42-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கோவை தொப்பம்பட்டியை சேர்ந்த தியாகராஜன் - லட்சுமி தம்பதியின் மூத்த மகள் ஸ்வாதிஸ்ரீ, 25. இளங்கலை வேளாண் பட்டதாரி. வேளாண் கல்வி மீது பள்ளி பருவத்திலிருந்தே நாட்டம் அதிகம். கோவை வேளாண் பல்கலையின் கீழ், தஞ்சாவூரில் உள்ள தனியார் வேளாண் கல்லுாரியில், இளங்கலை வேளாண் பட்டம் பெற்றவர். மூன்றாவது முறையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்றது குறித்து ஸ்வாதிஸ்ரீ கூறியதாவது: தேசிய அளவில், 42 வது இடம், தமிழகளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தாத்தா - பாட்டி வேளாண் தொழிலில் ஈடுபட்டதை பார்த்து ஆசைப்பட்டே வேளாண் படிப்பில் சேர்ந்தேன். பட்டம் பெற்ற பின் குடிமைப்பணித் தேர்வை எழுதினேன். சென்னை மனிதநேயம் அறக்கட்டளை, அறம் பயிற்சி மையத்தில் குடிமைப்பணி தேர்வ...

மும்பை போதைப் பொருள் தடுப்பு அதிகாரி (NCB) சமீர் வான்கடே சென்னைக்கு இடமாற்றம் - ஷாருக்கான் மகன் ஆர்யன் மீது பொய் வழக்கு தொடர்ந்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை.!

Image
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மீது போதைப்பொருள் வைத்திருந்ததாக பொய்யாக வழக்கு தொடர்ந்து, அவரை 20 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைத்த போதைப்பொருள் கடத்தல் வழக்கின் பொறுப்பாளரான சமீர் வான்கடே திங்கள்கிழமை சென்னைக்கு மாற்றப்பட்டார்.  இடமாற்ற உத்தரவை வருவாய்த் துறை மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டது. வான்கடே, மும்பை மண்டலத்தின் பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநரகத்திலிருந்து (DGARM) சென்னையில் உள்ள வரி செலுத்துவோர் சேவைகளின் (DGTS) பொது இயக்குநரின் அலுவலகத்திற்கு உடனடியாக நடைமுறைக்கு மாற்றப்பட்டதாக அது கூறியது. கோர்டேலியா போதைப்பொருள் சோதனை வழக்கில் ஆர்யனை போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் விடுவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, NCB இன் மும்பை மண்டலத் தலைவரான  வான்கடே மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. வான்கடே, ஒரு காலத்தில் NCB இன் உயர் அதிகாரியாகப் போற்றப்பட்டார்.  வான்கடேவின் கீழ் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, போதைப்பொருளில் ஈடுபட்டது தொடர்ப...

உத்தரபிரதேசம்: மாட்டுக்கறி தடையால் பராமரிக்க முடியாமல் மாடுகளை கைவிடும் விவசாயிகள் - விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படும் என அமைச்சர் எச்சரிக்கை.!

Image
லக்னோ: பால் உற்பத்தி செய்யாத மற்றும் வயதான பராமரிக்க முடியாத கால்நடைகளை கைவிடும் விவசாயிகள் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என உத்தரப் பிரதேச அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தரம்பால் சிங் கூறுகையில், "கசாயிக்கும் கிசானுக்கும் (கசாப்புக் கடைக்காரர் மற்றும் விவசாயி) வித்தியாசம் உள்ளது. விவசாயியை நாங்கள் பராமரிப்போம், கசாப்புக் கடைக்காரனை அல்ல" என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் தரம்பால் சிங் கூறினார். உத்தரபிரதேச சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அவதேஷ் பிரசாத் தெருக் கால்நடைகளின் அச்சுறுத்தலைத் தடுக்க அரசாங்கத்தின் திட்டத்தை அறியவும், அவற்றால் கொல்லப்படும் நபர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். மேலும் அவர் "இந்த கால்நடைகள் பராமரிக்க முடியாமல் விடுவிக்கப்பட்டவை. இவற்றை விடுவித்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு பசு பால் கொடுக்கும்போது, அது பராமரிக்கப்படுகிறது, அது பால் கொடுப்பதை நிறுத்தினால் தெருவில் விடப்படுகின்றது. பரா...

குஜராத் : கண்டெய்னர்களில் மறைத்து ஷார்ஜாவுக்கு கடத்தப்படவிருந்த 11.70 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் - வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை.!

Image
அகமதாபாத்தின் சபர்மதியில் உள்ள உள்நாட்டு சரக்குப் பெட்டக முனையத்தில் (ICD) இருந்து ஷார்ஜாவுக்கு கடத்தப்படவிருந்த 14.63 மெட்ரிக்டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.11.70 கோடியாகும்.  (Operation Rakth Chandan) ஆபரேஷன் செம்மரக்கட்டை என்ற பெயரிலான இந்த நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வைக்கப்பட்டிருந்த ஒரு சரக்குப்பெட்டகத்தை ஸ்கேனிங் செய்த போது, ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த கழிவறை சாதனங்களுக்கு பதிலாக, உருட்டுக்கட்டைகள் வடிவிலான பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.  இதையடுத்து அந்த கண்டெய்னரை திறந்து பார்த்த போது, அதில் 840 செம்மரக்கட்டைகள் இருந்ததையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பணமோசடி வழக்கு - டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் அமலாக்கத்துறையால் கைது.!

Image
பணமோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்க இயக்குனரகம் திங்கள்கிழமை கைது செய்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கட்சித் தலைவருக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சிபிஐ முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கு , அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்கள் மூலம் பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மாதம், இந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ. 4.81 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை ED தற்காலிகமாகப் பறிமுதல் செய்தது மற்றும் ஐந்தாவது ஒன்று—அக்கிஞ்சன் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தோ மெட்டல் இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட், பர்யாஸ் இன்ஃபோசொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், மங்லயாடன் ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், மற்றும் ஜே.ஜே. இது தவிர, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சுவாதி ஜெயின், சுசீலா ஜெயின், அஜித் பிரசாத் ஜெயின் மற்றும் இந்து ஜெயின் ஆகியோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. “ED இன் விசாரணையில், 2015-16 காலகட்டத்தில், ஷ. சத்யேந்தர் குமார் ஜெயின் ஒரு பொது ஊழியராக இருந்தார், மேலே குறிப்பிடப்பட்ட ...

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என தீர்மானம்.!

Image
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம் தலைமையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில் திமுக கழகத்தை தோற்றுவித்த அண்ணா மறைவுக்குபின் அவர் வழி தொட்டு இயக்கத்தை கட்டிக்காத்தவர் கலைஞர். இயக்கத்திற்கு பல்வேறு சோதனைகள் வந்த போது எல்லாம் அதை தகர்த்தெறிந்தவர்  13 முறை சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர் 5 முறை தமிழகத்தில் முதலமைச்சராக பணியாற்றி பல்வேறு திட்டங்களை தந்து தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்தி காட்டியவர் கலைஞர். வருகின்ற ஜூன் 3ம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் 99வது பிறந்த நாளையொட்டி தெற்கு மாவட்டத்தில் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக அலுவலகங்கள், சார்பு அணிகளின் அலுவலகங்கள் மற்றும் அனைத்து கிளை பகுதிகளிலும் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தை அலங்கரித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். மேலும் அனைத்து கிளைப் பகுதியில...

கலைஞர் பிறந்தநாள் விழாவில் மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்.!*

Image
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள மாவட்ட  அலுவலகத்தில் வைத்து மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்  வரும் 3ம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை வடக்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திமுக கழகத்தை தோற்றுவித்த அண்ணா மறைவுக்குபின் அவர் வழி தொட்டு இயக்கத்தை கட்டிக்காத்தவர் கலைஞர். இயக்கத்திற்கு பல்வேறு சோதனைகள் வந்த போது எல்லாம் அதை தகர்த்தெறிந்தவர்  13 முறை சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர் 5 முறை தமிழகத்தில் முதலமைச்சராக பணியாற்றி பல்வேறு திட்டங்களை தந்து தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்தி காட்டியவர்  கலைஞர் 99வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகர நகர ஒன்றிய பகுதி வார்டு மற்றும் கிளைக்கழகங்க...

கோவில்பட்டி காளியம்மன் கோவிலில் வைகாசி மாதவர் கொடைவிழா கடம்பூர் ராஜு எம்எல்ஏ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

Image
கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் வைகாசி மாதம் கோடை விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அனுக்ஞை விநாயகர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் வைகாசி மாதம் கோடை விழா முன்னிட்டு இன்று காலை 7 மணி அளவில் தீர்த்த கும்பம் எடுத்து வந்து ஸ்ரீ காளியம்மனுக்கு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது‌.  இவ்விழாவில் திருவள்ளுவர் மன்றம் தலைவர் கருத்த பாண்டியன், மாமன்னர் பூலித்தேவன் மக்கள் இயக்க நிறுவனர் செல்வத்தேவர், தலைமையில் முன்னால் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி,16 வது வார்டு செயலாளர் ரமேஷ், ஆவி...

Civil Services Exam: 3 Top Scorers Are Women, Shruti Sharma Is AIR 1st

Image
Shruti Sharma, Ankita Agarwal and Gamini Singla have secured the first, second and third rank respectively in the civil services examination 2021, results of which were announced by the Union Public Service Commission (UPSC) on Monday. As many as 685 candidates have qualified the prestigious test, it said, without sharing further details of the candidates selected in the examination. Of the successful candidates, 244 are from general category, 73 from Economically Weaker Sections, 203 of Other Backward Classes, 105 Scheduled Caste and 60 from the Scheduled Tribes, the Commission said.

கோயில் பெயரில் வசூல் செய்து மோசடி - கைதான பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்க்கு ஜூன் 13ம் தேதி வரை நீதிமன்றக்காவல்.!

Image
வட்டத்தில் உள்ளவர் கார்த்திக் கோபிநாத் கோயில் மறுசீரமைப்புக்காக என ஆன்லைனில் நிதி திரட்டி ₹34 லட்சம் மோசடி புகார் - கைதான பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் என்பவருக்கு ஜூன் 13ம் தேதி வரை நீதிமன்றக்காவல்; புழல் சிறையில் அடைக்க அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு

குழந்தைகள் திட்ட அலுவலரை அரிவாளால் வெட்டிய உதவியாளர் கைது!

Image
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் ராஜேஸ்வரி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தேனி மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக திட்ட அலுவலர் ராஜேஸ்வரியை இளநிலை உதவியாளராக இருந்த உமா சங்கர் அரிவாளால் வெட்டியதில்  ராஜேஸ்வரி படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த ராஜேஸ்வரியை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  அரிவாளால் வெட்டிய உமாசங்கரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால்  அலுவலகம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. உமாசங்கருக்கு திட்ட அலுவலர் ராஜேஸ்வரி 17 பி- யில் தண்டனை கொடுத்ததால் அரிவாளால் வெட்டியுள்ளதாக தெரியவருகிறது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கிறார்கள். -தேனி செய்தியாளர் ரா.சிவபாலன்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த கட்டணம்.! - மாநகராட்சியின் அவசர கூட்டத்தில் முடிவு - அதிமுக வெளிநடப்பு.!

Image
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் வக்கீல் வீரபாகு, வெற்றிச்செல்வன், வக்கீல் மந்திரமூர்த்தி, முன்இருக்கையில் அமர்ந்து கொண்டனர். அகர வரிசை படி உறுப்பினர்களுக்கு இருப்பிடம் ஓதுக்கப்பட்டுள்ளது.  மண்டல தலைவர்கள் 4 பேர் முன்வரிசையில் இடமளிக்கப்பட்டுள்ளது. ஆகவே உங்களுக்குரிய இடத்தில் அமரும்படி மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டார். அதன்படி அவர்களது இடத்திற்கு சென்றனர். பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி நகர் நல அலுவலர் மூலம் ஹோலிகிராஸ் பள்ளி அருகிலிருந்த ஆரம்ப சுகாதார மையம், சத்திரம் பகுதியில் மாற்றப்பட இருந்ததை மீண்டும் பழைய இடத்திலேயே அமைப்பதற்கும்  சிவந்தாகுளம் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிகம் இருப்பதால் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.  விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு எதிரில் உள்ள உப்பு இலாக்...

கஞ்சா கடத்தல் : 813 வங்கி கணக்குகள் முடக்கம்.- தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தகவல்.!

Image
தென் மண்டலத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம்.- தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தகவல் தென் மண்டலத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்திலில் ஈடுபட்டால் கடத்தல்காரர்கள் மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என தென்மண்டல ஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களைக் கொண்ட காவல்துறை தென் மண்டல ஐஜியாக அஷ்ரா கார்க் நியமிக்கப்பட்டதிலிருந்து கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பொருட்டு தனிப்படை மற்றும் வாகன சோதனையை தீவிரப்படுத்துதல் போன்ற பல முயற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில்  இந்த ஆண்டு மட்டும் கஞ்சா கடத்தல் தொடர்பான அறிக்கை ஒன்று தென்மண்டல ஐஜி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் 114 வழக்குகளில் 191 வங்கிக் கணக்குகளும், விருதுநகர் மாவட்டத்தில் 76 வழக்குகளில் 119 வங்கிக் கணக்குகளும், திண்டுக்கல்லில் 77 வழக்குகளில் 116 வங்கிக் கணக்குகளும், தேனியில் 81 வழக்குகளில்...

தமிழகத்தில் இன்று யாரும் கைநீட்டி குறை சொல்ல முடியாத ஒரு ஆட்சியை தமிழக முதல்வர் நடத்தி வருகிறார் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.!

Image
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். ஆனால், அது உண்மை இல்லை என்று தூத்துக்குடியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உள்ள சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் எதிரில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கழக மகளிரணி செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்  தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன்,  கடந்த ஆட்சியாளர்கள் நாம் செய்யும் திட்டங்கள் ஒவ்வொன்றிலும் குற்றம் கண்டுபிடித்து பேசுகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு ...

கர்நாடகா : விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் மீது கருப்பு மை வீசி தாக்குதல் - 3 பேர் கைது.

Image
கர்நாடகத்தில் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் மீது கருப்பு மை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டாக தில்லியில் நடைபெற்ற போராட்டத்தை ஒருங்கிணைத்த தலைவர்களில் ஒருவரான பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் நிகழ்ச்சியில் தலைவர் ராகேஷ் திகைத் பெங்களூருவில் பங்கேற்றார். இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மேடை அருகே வந்த ஒருவர் ராகேஷ் திகைத்தை அங்கிருந்த மைக்கை எடுத்து தாக்கினார். தொடர்ந்து வந்த மற்றொருவர் கருப்பு மை வீசினார். இதையடுத்து, அங்கிருந்த ராகேஷ் திகைத் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தி அவர்களை மடக்கிப் பிடித்தனர். சம்பவத்தில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அங்கு அசாதரண சூழல் நிலவியது. இதுகுறித்து ராகேஷ் திகைத் கூறுகையில், "இந்த நிகழ்விற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அரசுடன் கூட்டு சேர்ந்து தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது" என்றார்.

தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி - உத்தரபிரதேசம் அணி கோப்பையை வென்றது.!*

Image
வெற்றி பெற்ற அணியினருக்கு கனிமொழி கருணாநிதி எம்பி பரிசு வாங்கினார் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சார்பில் நடத்தப்பட்ட ஹாக்கி இந்தியாவின் 12-ஆவது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் அமைந்துள்ள செயற்கை புல் ஹாக்கி மைதானத்தில் கடந்த 17/05/2022 அன்று துவங்கி நடைபெற்று வந்த நிலையில்   நேற்று, மாலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் உத்திரபிரதேசம் சண்டிகர் அணிகள் மோதின இதில் உத்திரபிரதேசம் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது 2வது இடத்தை சண்டிகர் அணி கைப்பற்றியது. 3வது மற்றும் 4வது இடத்திற்கு அரியானா ஒடிசா அணிகள் விளையாடின இதில் அரியானா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது விழாவில் போட்டியின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி சுழல் கோப்பையை மற்றும் பரிசுகளை வழங்கினார்  முன்னதாக கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த 350-க்கும் அதிகமான சிறுவர்களுக்கு ஹாக்கி மட்டை வழங்கி, முன்னாள் ஹாக்கி வீரர்களை கவுரவித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ...