Posts

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலை அரங்கேற்றம் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.!

Image
  2021-ல் ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்தோம்; இப்போது ரூ. 2,044 கோடி மட்டுமே தள்ளுபடி. 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ளோருக்கு பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி என தவெக அறிவித்திருந்தது. நிலத்தை அளவிட்டு தராமல், இப்போது பணத்தை அளவுகோலாக வைத்தது மிகப்பெரிய ஏமாற்று வேலை. விவசாயி என்ற முறையில் சொல்கிறேன், விவசாயிகளை ஏமாற்றும் அரசு நிலைத்ததாக சரித்திரம் இல்லை. – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி_

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் SCAM : விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க. அரசு - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு.!

Image
  பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி. 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள். இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar? _– எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்_

3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு.

Image
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு. மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு. ஏற்கெனவே முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைப்பு.! -தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

Image
  கோடை வெயில் காரணமாக வரும் ஜூன் 4ம் |தேதி பள்ளிகள் திறக்கப்படும் - தமிழ்நாடு அரசு பல்வேறு தரப்பினர் வைத்த கோரிக்கையை ஏற்று 3 நாட்கள் தள்ளி பள்ளிகள் திறப்படுகிறது.

அதிமுக அணிகள் இணைப்பில் பின்னடைவு - கடைசி நேரத்தில் இபிஎஸ் தரப்பு வைத்த நிபந்தனையால் அணிகள் இணைப்பில் பின்னடைவு.!

Image
அதிமுகவின் இரு அணிகளும் இன்று மாலை 4 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இணையும் என கூறப்பட்ட நிலையில் பின்னடைவு கடைசி நேரத்தில் இபிஎஸ் தரப்பு வைத்த நிபந்தனையால் அணிகள் இணைப்பில் பின்னடைவு அனைவரும் மன்னிப்பு கடிதம் அளிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் கூறியதாக தகவல் மன்னிப்பு கடிதம் எல்லாம் கொடுக்க முடியாது என கூறி அனைவரும் திரும்பி சென்றதாக தகவல்

தூத்துக்குடி :பத்திரப்பதிவு அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம் : ரூ.10,000 முதல் பல லட்சங்கள் வரை கட்டாய வசூல்! - லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை பாயுமா ?

Image
  தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில், ஏழை எளிய மக்கள் மற்றும் நில உரிமையாளர்களை அலைக்கழித்து அதிகாரிகள் லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு வருவதாகப் பொதுமக்கள் தரப்பில் பல புகார்கள் எழுந்துள்ளன. தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் ஒருங்கிணைந்த மாவட்டப் பத்திரப்பதிவு அலுவலக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வீடு, நிலம் உள்ளிட்ட பல்வேறு சொத்துப் பத்திரப்பதிவுகளுக்கு வரும் பொதுமக்களிடம், அங்குள்ள சில பத்திரப்பதிவு அலுவலர்கள் மற்றும் இடைத்தரகர்கள் தொடர்ந்து கட்டாய லஞ்சம் பெற்று வருவதாக மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அடுக்கடுக்கான புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன. தமிழகத்தில் அண்மையில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுப் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னரும், இந்த அரசுத் துறையின் கீழ்மட்ட உள்கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும், மாறாக லஞ்ச நடைமுறைகள் முன்பை விடப் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பத்திரப்பதிவுக்காக வரும் ஏழை எளிய மக்களிடம் ஏதாவது ஒரு சட்டப்பூர்வச் சாக்குப்போக்குகளைக் கூறி, அதிகாரிகள் திட்டமிட...

அதிமுக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா..! - தவெகவில் இணைகிறார்.!

Image
  அதிமுக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த Isakki Subbiah, இன்று தவெக பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு அவரை அமைச்சர் ஆனந்த் வரவேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தமிழக அரசியலில் மேலும் ஒரு முக்கிய அரசியல் நகர்வு நிகழ்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. Tamilaga Vettri Kazhagam கட்சியில் அவர் அதிகாரப்பூர்வமாக இணையும் நிகழ்வு விரைவில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இ தன் மூலம் அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 43ஆக குறைவு..! சட்டமன்ற தேர்தலில் 47 தொகுதிகளில் வெற்றி பெற்ற All India Anna Dravida Munnetra Kazhagam அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை தற்போது 43ஆக குறைந்துள்ளது. தவெகவில் இணைந்த 3 எம்.எல்.ஏக்கள் மற்றும் 1 எம்.எல்.ஏ ராஜினாமா செய்ததன் பின்னர் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், Edappadi K. Palaniswami ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 22ல் இருந்து 27ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், சிவிஎஸ் தரப்புக்கு 16 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அரசியல் நகர்வுகள் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.