Posts

இளம் பெண் மாயம் - பெற்றோர் புகார்.!

Image
  பெயர்: லூர்துஷாமினி (27/26) தந்தை பெயர்: இரவீந்திரன் முகவரி: 49C, பூபால்ராயபுரம், 1-வது தெரு, தூத்துக்குடி. மேற்படி பெண் 30.07.2026 அன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர், இரவு வரை வீடு திரும்பவில்லை. பெற்றோர் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் குற்ற எண்: 659/2026, பெண் காணாமல் போனது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்படி பெண்ணைப் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தால், கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்: தூத்துக்குடி வடக்கு காவல் நிலையம்: 94981 01884 வடக்கு காவல் நிலைய ஆய்வாளர்: 94458 80573

தூத்துக்குடியில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தாவிற்கு போயிங் ஏர்பஸ் ரக விமானங்களை இயக்க வேண்டும். ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை.!

Image
தூத்துக்குடியில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தாவிற்கு போயிங் ஏர்பஸ் ரக விமானங்களை இயக்க வேண்டும் என ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும்  முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் :- தூத்துக்குடி மாவட்டம் ஏராளமான தொழில்கள் நிறைந்த மாவட்டமாகும். உப்பு உற்பத்தி, தீப்பெட்டி தயாரிப்பு போன்ற பாரம்பரிய தொழில்களுடன் அனல் மின் நிலையங்கள், ஸ்பிக் உரத் தொழிற்சாலை, கனநீர் தயாரிப்பு, சிர்கோனியம், DCW கெமிக்கல் ஆலை ஆகிய கனரக இயந்திர தொழிற்சாலைகள் மற்றும் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் என்ற வகையில் தொழில்வளம் பெருகியுள்ளது. தற்போது வின் பாஸ்ட் நவீன கார் தொழிற்சாலை, உடன்குடி அனல் மின் நிலையம், குலசேகரபட்டினம் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் போன்று புதிய தொழில்கள் வருகின்றன. மேலும் பல பெரிய தொழிற்சாலைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். துறைமுகம், இர...

151 மருத்துவ இடங்களை கைவிட்ட தவெக அரசு - மருத்துவர்கள் சங்கம் கண்டனம்!

Image
151 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை ஒன்றிய அரசுக்கு ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு, அரசின் நிர்வாக தோல்வியே காரணம் என மருத்துவர்கள் சங்கம் கண்டனம்! தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அரசின் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சரண்டர் செய்ய எதிர்ப்பு கூட தெரிவிக்க முடியாமல் போயுள்ளது. #MedicalCollege | #SupremeCourt | #TNGovt

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு!

Image
  கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு அரசு வழங்கிய அரசுப் பணி நியமன ஆணைகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2025 செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட நிலையில், தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து கடந்த ஜூலை 10-ஆம் தேதி உயிரிழந்த 31 பேரின் வாரிசுதார்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார். கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியதை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. வழக்கு விசாரணையின் போது, காவல்துறையின் தவறால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், சாதாரண அரசுப் பணியே வழங்கப்பட்டுள்ளதாகவும் அ...

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Image
  தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444 வது ஆண்டுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணியளவில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலி முடிந்ததும் அருள்தந்தைகள் ஊர்வலமாக கொண்டுவந்த தூய பனிமயமாதா உருவம் பொறித்த கொடி பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என முழக்கமிட்டனர். மேலும், புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளைத் தட்டி தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26 இல் தொடங்கி ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும். திருவிழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவர்-மாணவிகள் கல்வி மேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், நற்கருணை பவனி நடைபெறும். 10 ஆம் நாள் விழாவில் நகர வீதிகளில் பனிமய அன்னையின் திருவுருவ தேர் பவனி நடைபெறும். வரும் ஆகஸ்ட...

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!

Image
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், காவல் துறை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி  எம்பி குற்றம் சாட்டினார். தூத்துக்குடிக்கு வருகை தந்த கனிமொழி, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது, நாடு முழுவதும் போராடிய இளைஞர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இளைஞர்கள் ஒன்றுதிரண்டு போராடி மத்திய அரசை எதிர்கொண்டு வென்று காட்டியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை இளைஞர்கள் முன்வைக்கிறார்கள். திமுக தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையும் அதுவே ஆகும். கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உருவாகும்" என்று தெரிவித்தார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர்: "தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்...

தூத்துக்குடி முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினா் 100 போ் திமுகவில் ஐக்கியம்.!

Image
தூத்துக்குடி கடம்பூா் பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியினா் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.    கயத்தாறு அருகே கடம்பூா் பகுதியை சேர்ந்த தொழிலதிபா் ராமசாமி, மதிமுக முன்னாள் கிளைச்செயலாளா் கந்தசாமி, 10வது வாா்டு அதிமுக செயலாளர் சுப்புராஜ், முன்னாள் தேமுதிக கிளைச்செயலாளர் அச்சப்பன், அமமுக கிளைசெயலாளர் சுடலைராஜன், அமமுக மகளிரணி மகாலட்சுமி, சிபிஐ கலாவதி, அதிமுக செல்லத்துரை பாண்டியன், சீனிவாசன், பேரூராட்சி 12வது வாா்டு கவுன்சிலா் முத்துமாாி உள்பட 100க்கும் மேற்பட்டோா் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். அவா்களுக்கு கருப்பு சிவப்பு துண்டு அணிவித்து முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் வரவேற்றாா். அப்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கயத்தாறு ஓன்றிய செயலாளர்கள் சின்னப்பாண்டியன், பாலக்குமாா், கடம்பூர் பேரூராட்சி தலைவர் நாகராஜா, பேரூராட்சி 9வது வாா்டு கவுன்சிலா் ஜெயராஜ், முருகன், கிருஷ்ணமூர்த்தி, மாியசுந்தரம் மாநகர இளைஞா் அணி துணை அமைப்பாளா் ...