Posts

Showing posts from December, 2021

1 முதல் 8 ம் வகுப்பு வரை மறுபடியும் லீவு... 2022 பாதி 'லாக்டவுன்' முழு விவரம்

Image
 தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஆணை எண்.882 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 15.12.2021-ன்படி, 31.12.2021 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 31.12.2021 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. க. பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு மற்றும்  மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் கல...

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிப்பு.! - மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை!

Image
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிப்பு.! - மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை! தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிப்பு.! - மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை! அனைத்து பள்ளிகளிலும் 1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அனுமதி இல்லை!  அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் 50% பார்வையாளர்கள் உடன் செயல்பட அனுமதி அழகு நிலையங்கள், சலூன்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும்  வழிபாட்டுத் தலங்களில் தற்போதைய நடைமுறையே தொடரும் உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதி என தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்ற போலி சாமியார்.! : பாலியல் வன்முறை செய்த கொடூரம்!!- போலி சாமியார் உட்பட 3 பேர் போக்சோவில் கைது!

Image
திண்டிவனம் அருகே சிறுமியை கடத்தி பாலியல் வன்முறை செய்த போலி சாமியார் உட்பட 3 பேரை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி கடந்த 13ம் தேதி வீட்டில் கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். அப்போது கீழ் ஆதனூர் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை நிறுத்தி சிறுமியை கட்டாயப்படுத்தி ஆட்டோவில் ஏற்றி உள்ளார். அப்போது சிறுமி திண்டிவனம் செல்வதாக கூறி உள்ளார். திண்டிவனத்தில் விடுகிறேன் என கூறி ஆட்டோ ஓட்டுனர் சிறுமியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மதுராந்தகம் அழைத்துச் சென்றுள்ளார். இதனிடையே சிறுமியை காணவில்லை என திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.  புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர். இதனிடையே சிறுமியை கடத்தியவர்கள் சிறுமியின் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு அதிலிருந்த சிம்மை எடுத்துவிட்டு வேறு சிம்மை போட்டு பயன்படுத்தி வந்தது தெரியவந்...

சென்னை பெருமழை - ரேடார்களை சரி செய்யாத ஒன்றிய அரசின் தாமதமே காரணம்!" - தயாநிதி மாறன்

Image
வானிலை ரேடார்களை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய பிரதமருக்கு 2 கடிதங்கள் எழுதியும் பிரதமர் அலுவலகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரேடார் கருவிகளை உடனே சரி செய்ய வேண்டும்; சரி செய்யாததால் சென்னையில் நேற்று பெய்த மழை குறித்த முன்னறிவிப்பை வானிலை மையத்தால் தர முடியவில்லை. நேற்று சென்னை பெருமழையால் பொதுமக்கள் நெரிசலில் சிக்கித் தவித்ததற்கு ஒன்றிய அரசின் தாமதமே காரணம். மழை, வெள்ள நிவாரணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3 முறை கோரிக்கை விடுத்தும் ஒன்றிய அரசு நிதி தரவில்லை. ரேடார்களை ஒன்றிய அரசு உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழ்நாடு அரசு கோரிய மழை, வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் - என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை #ChennaiRains  #DayanidhiMaran

164 பேர் ரவுடி பட்டியலில் இருந்து நீக்கம்!- எஸ்பி ஜெயக்குமார் நடவடிக்கை!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவித குற்ற செயல்களில் ஈடுபடாமல் திருந்திய 164 பேருக்கான சரித்திரப்பதிவேடுளை ரத்து செய்ய எஸ்பி ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் சட்டவிரோத செயல்கள் மற்றும் ரவுடித்தனத்தில் அடிக்கடி ஈடுபடும் குற்றவாளிகள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சரித்திர குற்ற பதிவேடு (Rowdy History Sheet) பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் உள்ள குற்றவாளிகளின் நடவடிக்கைகள் குறித்து அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 1794 குற்றவாளிகள் மீது சரித்திர குற்ற பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1794 சரித்திர குற்ற பதிவேடு கொண்ட குற்றவாளிகளின் கடந்த 5 ஆண்டு கால நடவடிக்கைகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில், மாவட்ட உட்கோட்ட காவல்துறை உதவி காண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் கொண்ட ஆய்வுக்குழு ஆய்வு செய்தனர்.  இதில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வித குற்ற செயல்களிலும் ...

தனியார் பள்ளியில் காவல்துறை துணை ஆணையர் நுழைய அனுமதி மறுப்பு.! - இந்து அமைப்பினர் எதிர்ப்பால் பதற்றம்!!

Image
கோவை விளாங்குறிச்சி அருகே RSS சார்பில் சாகா பயிற்சி நடைபெறும் தனியார் பள்ளியினுள் காவல்துறை துணை ஆணையர் ஜெயச்சந்திரனை  அனுமதிக்க மறுத்த இந்து அமைப்பினர்   உள்ளே அனுமதிக்காமல் வெளியே திருப்பி அனுப்பினர். https://twitter.com/Srinietv2/status/1476875786208485380?t=Y9JAAXkDmRa7CtEud7v5bw&s=19 பல்வேறு அமைப்பினர் போராட்டம் அறிவித்ததையடுத்து, அசம்பாவித சம்பவங்களால் அப்பகுதியில் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். விளாங்குறிச்சி அருகே ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முன்பு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து! - சந்திக்க நேரில் வரவேண்டாம் என அறிவுறுத்தல்!

Image
புத்தாண்டு நாளான ஜனவரி 1 அன்று என்னைச் சந்திப்பதற்காக நேரில் வருவதைக் கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :- தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் ஆறாவது முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வருகிற முதல் ஆங்கிலப் புத்தாண்டான 2022 சனவரி 1-ஆம் நாளில், அந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் பலரும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த எண்ணத்தை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. எனினும், கொரோனா நோய்த் தொற்றின் புதிய வடிவான ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உங்களின் முதலமைச்சரான நானும், அந்தக் கடமையை உணர்ந்தவர்களாகக் கழகத்தின் உடன்பிறப்புகளாகிய நீங்களும் இருப்பதால், உங்களின் மனப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு, புத்தாண்டு நாளான சனவரி 1 அன்று என்னைச் சந்திப்பதற்காக நேரில் வருவதைக் கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்...

ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு எதிர்கட்சியாக இருந்தால் ஒரு நிலைபாடு திமுக இரட்டை வேடம் போடுவதே வாடிக்கையாகி விட்டது - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம்.!

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தில் 2016-2017 திட்டத்தின் கீழ் 60 கோடி மதிப்பில் நகராட்சி 36 வார்டுகளில் உள்ள 462 பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன  இதில் 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துவிட்டது.  இதில் கதிரேசன் கோயில் சாலையில் உள்ள ஜீவா நகர் பகுதியில் 2.50 லட்சம் மதிப்பில்  பேவர் பிளாக் சாலை  அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது  இதனை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ ஆய்வு செய்து பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளரிடம் கூறுகையில் : திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது தமிழகம் வருகை புரிந்த பாரதப் பிரதமர் மோடியை விமர்சித்த திமுக தற்போது அமைதியாக இருப்பதன் காரணம் என்ன என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர் எதிர்க்கட்சியாக இருந்த ஒரு நிலைப்பாடு ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு என்ற இரட்டை வேடத்தை திமுக வாடிக்கையாகக்...

"10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக சென்னையை குட்டிச்சுவாரக்கி விட்டது" - முதலமைச்சர் ஸ்டாலின் குற்றசாட்டு

Image
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுகவினர்  சென்னைக்கு எதுவும் செய்யாமல் குட்டிச்சுவாரக்கி வைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று (டிச.,30) திடீரென சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாக திடீரென கனமழை பெய்தது. இதில், பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் வெள்ளநீரை வெளியேற்றும் பணியை நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எப்போதும் வானிலை மையத்திலிருந்து முன்னெச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால், இம்முறை அவர்களே எதிர்பாராமல் மழை கொட்டித் தீர்த்துள்ளது. வெள்ள நீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றி இன்றைகுள் சரிசெய்யப்படும். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் சென்னைக்கு எதுவும் செய்யாமல் குட்டிச்சுவாரக்கி வைத்திருக்கிறார்கள். விமர்சனம் செய்வதற்கு தயாராக இல்லை, இதை சரி செய்யனும். அடுத்த பருவ மழைக்குள் மீண்டும் மழைநீர் தேங்காத வகையில் இவைகளை சரிசெய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நேஷனல் பொறியியல் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா ஆண்டு சந்திப்பு.!

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரியில் 1991 - 1995 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரித் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், இயக்குனர் முனைவர். சண்முகவேல் மற்றும் முதல்வர் முனைவர்.காளிதாச முருகவேல், முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீநிவாசகன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்விற்கு கல்லூரியில் 1991-1995 ஆண்டு பயின்று தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத் யுனைடட் கிங்டம் போன்ற வெளிநாடுகளிலும் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டில்லி  போன்ற பெருநகரங்களிலும் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் தங்களது குடுத்பத்தினருடன் நேரடியாகவும் இணையவழியிலும் கலந்து கொண்டு தங்களது கல்லூரி கால நினைவுகளையும் கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

முதுநிலை மருத்துவப்படிப்பு கவுன்சிலிங் ஜனவரி 6ம் தேதிக்கு முன்பாக தொடங்கும் என அரசு உறுதி.!

Image
போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீது எந்த வழக்குப்பதிவும் இல்லை - இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை! #NeetPGcounselling

திருச்செந்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 7 கோயில்களில் மருத்துவ மையங்கள்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.!

Image
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: திருச்செந்தூர்-அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை - அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், மேல்மலையனூர்- அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், சோளிங்கர்- அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், மருதமலை- அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி-அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பழனி-அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் (மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம்) ஆகிய 7 திருக்கோயில்களில் மருத்துவ மையங்களை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை புரியும் 10 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு அக்கோயில்களில், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனுக்குடன் உயிர் காக்கும் மருத்துவ முதலுதவி அளித்திடும் வகையில் இரண்டு மருத்துவர்கள்,  இரண்டு செவிலியர்கள், இரண்டு பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களை கொண்டு மருத்துவ மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 2021-22ம் ...

தூத்துக்குடியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு நல்லாட்சி தின கருத்தரங்கு.!

Image
முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 97வது  பிறந்த தினம் முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நாடு முழுவதும் நல்லாட்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதனடிப்படையில் நேற்று தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தனியார் மண்டபத்தில் வைத்து நல்லாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக கருத்தரங்கு நடைபெற்றது நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,புதுச்சேரி எம்பி செல்வகணபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பால்ராஜ்  தலைமை வகித்தார் மேலும் வணிக பிரிவு மாநில தலைவர் ஏ என் ராஜா கண்ணன், மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், ஓபிசி அணி மாநிலச் செயலாளர் விவேகம் ரமேஷ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் ரத்தினம் முரளி  மற்றும்  மாவட்ட துணைத்தலைவர் தங்கம் மாவட்ட செயலாளர்கள் மான்சிங் ரவிச்சந்திரன் வீரமணி செல்வ கணி அரசு தொடர்பு குறித்து மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் பிற மொழி  மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் ஓபிசி மாவட்ட தலைவர் தங்கப...

சென்னை பெருமழை.!: இரவில் களமிறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்.! - "நிலைமை விரைந்து சீர்செய்யப்படும் " என தகவல்.!*

Image
சென்னை மாநகரில் நேற்று காலை முதல் தொடர்ந்து வரலாறு காணாத பலத்த மழை கொட்டியது. இதனால், சாலையிலும் மழைநீர் ஆறாக ஓடியது. உடனடியாக நீரை அகற்றும் படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தர விட்ட தைத் தொடர்ந்து அமைச்சர்களும், அதிகாரிகளும் நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், திருச்சி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ரிப்பன் மாளிகைக்கு நேரில் சென்று மழை நீரை அகற்றும் பணிகளை விரைந்து நடக்க முடுக்கி விட்டதுடன், சென்னைரிப்பன் மாளிகை,பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில், கன மழையால் சென்னை மாநகரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற் கொண்டார். பின்னர் அவர் கூறுகையில்...வானிலைக் கணிப்புகளையும் மீறிக் கொட்டித் தீர்க்கிறது மழை. எதிர்பாராத மாமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து திரும்பியவுடன், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்திற்கு வந்து, எடுக...

மதுரையில் ஜனவரி 12-ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.!

Image
மோடி பொங்கல் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது- தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை*

ஒரேநாளில் 4 லட்சத்தி 88ஆயிரம் பேருக்கு கொரோனா.! - அச்சத்தில் உறைந்து போன அமெரிக்கா.!!

Image
அமெரிக்காவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தி 88 ஆயிரத்தை எட்டியுள்ளது. இது இதுவரை உலகில் வேறு எங்கும் இல்லாத உச்சமாக உள்ளது . இதனால் ஒரே நாளில் 1,674பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கு மேல் உயிரிழப்பு ஏற்பட்டு, கொரோனா தொற்று உச்சத்தை தொட்டு வருவது மக்களை அச்சத்துக்குள்ளாக்கி வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தினந்தோறும் அனுமதிக்கப்பட்டு வருவதால், அங்குள்ள படுக்கைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் ஒரே நாளில் 1,674பேர் கொரோனா தொற்றால் அங்கு உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 8,44,000 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து குறிப்பிடத்தக்கது. #america #coronavirus #Omicron

அருணாசல பிரதேசத்தில் 15 இடங்களுக்கு அதிகாரபூர்வ சீன பெயர்கள்.! - இந்தியாவை வம்பிழுக்கும் சீனா!!

Image
இந்திய மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்துக்கு உட்பட்ட 8 குடியிருப்பு பகுதிகள், 4 மலைகள், 2 ஆறுகள் மற்றும் ஒரு மலைக்கணவாய் ஆகியவற்றுக்கு சீன, திபெத் மற்றும் ரோமன் எழுத்துகளில் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.  அருணாசல பிரதேச மாநிலத்தை தெற்கு திபெத் எனக்கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் இதை தொடர்ந்து எதிர்த்து வரும் மத்திய அரசு, அந்த மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என திட்டவட்டமாக கூறி வருகிறது. இந்த நிலையில் அருணாசல பிரதேசத்தில் மேலும் 15 இடங்களுக்கு தரப்படுத்தப்பட்ட சீன பெயர்களை அந்த நாடு அதிகாரபூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.   சீனாவின் அமைச்சரவை மற்றும் மாநில கவுன்சில் வழங்கிய புவியியல் பெயர்கள் மீதான விதிமுறைகளுக்கு இணங்க இந்த பெயர்கள் சூட்டப்பட்டு இருப்பதாக சீன சிவில் விவகரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.  ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டும் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த 6 பகுதிகளுக்கு இவ்வாறு சீனா பெயர் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் புத்தாண்டு வாழ்த்து !

Image
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. புது வருடம் பிறக்கிறது என்றாலே அனைவருடைய மனதிலும் புதிய தன்னம்பிக்கை மேலோங்கும் இதுவரை சந்தித்த துன்பங்களும் துயரங்களும் புதிய வருடத்தில் நீங்காதா என்ற எதிர் பார்ப்பை உருக்கும். எத்தகைய சோதனைகள் வந்தாலும் தொடர்ந்து நமக்காக உழைக்கும் விவசாயிகளின் அர்ப்பனிப்பு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை தொழில் துறை வீழ்ச்சி உள்ளீட்ட காரணங்களால் பல இலட்சக்கணகான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் தங்களது எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விக்குறியுடன் காத்திருகின்றனர். முடங்கி கிடக்கும் சிறு குறு தொழில்களை மத்திய, மாநில அரசுகள் மீட்டுடெக்காமல் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க முடியாது. ஆளும் அரசுகளின் நடவடிக்கைககளால் மட்டுமே மாற்றத்தை ஏற்ப்படுத்த முடியும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்யவும் .  எனவே : இந்திய மக...

இனி ரயிலில் கடைசி நிமிடத்தில் ஏறலாம்... மீண்டும் சாதாரண டிக்கெட் கொடுக்குது ரயில்வே!

Image
கொரோனா துவங்கிய காலம் முதல் பொதுமக்கள் அனுபவித்து வரும் அவதிகள் சொல்லி மாளாது. நாளுக்கு நாள் ஒவ்வொரு விதமான துன்பத்துக்கு ஆளாகிறோம். அந்த வகையில் நம்மை பெரும் சிரமத்துக்கு ஆளாக்கிய விஷயங்களில் போக்குவரத்து பிரச்சினையும் ஒன்று. கொரோனா பரவலை தடுக்க ரயில்கள் அனைத்திலும் முன்பதிவு செய்த பயணிகள் மட்டும் தான் பயணிக்க முடியும் என்று அறிவித்தார்கள். இது சாமானிய மக்களுக்கு பேரிடியாக அமைந்தது. இரண்டு ஆண்டுகளாக பயணம் செய்ய வேண்டிய காலங்களில் ஏழை, எளிய மக்கள் ரயில் முன் பதிவுக்காக பெருமளவு அவஸ்தை பட்டனர். அவசரத்துக்கு செல்பவர்கள் ரயிலில் ஏற முடியாத நிலை இருந்தது. இந்த சூழ்நிலையில், பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் மீண்டும் ரிசர்வேஷன் இல்லாத பெட்டிகளை இயக்குகிறதாக தென்னக இரயில்வே அறிவித்து உள்ளது. தென்னக இரயில்வே அறிவிப்பின்படி, ரயில் எண் 22609 மற்றும் மறுமார்க்கமாக மங்களூரில் இருந்து கோவை செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் இரண்டு சாதாரண பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது. ரயில் எண்: 16844 மறுமார்க்கமாக பாலக்காடு டவுனில் இருந்து திருச்சிராப்பளளி சென்று வரும் பாலக்காடு எக்ஸ்பிரஸில் 2 சாதாரண முன்பதி...

தூத்துக்குடி : ஊதியம் வழங்காததால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது!

Image
4 மாதங்களாக ஊதியம் வழங்காததால்  தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை குண்டு வீசி தகர்த்து விடுவதாக தொலைபேசியில் மிரட்டல் விடுத்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஒப்பந்த ஆம்புலன்ஸ் டிரைவரை  போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொல்லங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் அனீஸ் என்ற பூலுடையார்‌‌ (34). இவர் ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆம்புலன்சில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார்.  இவருக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.  அதிகாரிகளிடம் பல முறை கேட்டும் சரிவர பதில் அளிக்காததால் ஆத்திரம் அடைந்த அனீஸ் போதையில் சென்னையில் உள்ள மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தனக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்த்து விடுவேன் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.  இதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து நாரைக்கிணறு போலீசார் விசாரணையில் இறங்கினர். அதில், அனீஸ் தான் ...

பொதுமக்கள் அனைவரும் துணிப் பைகளை பயன்படுத்த கோரி 7வயது சிறுமி ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வு.!

Image
பாலிதீன் பைகள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். அனைவரும் துணிப்பை உபயோகப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் சார்பில் 7 வயது சிறுமி ரவீனா என்பவர் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஸ்கேட்டிங் சென்று பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கி விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  விழிப்புணர்வு நிகழ்வை தொடங்கி வைத்தார்.  கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பிருந்து காந்தி மைதானம் வரை ஸ்கேட்டிங் மூலம் சென்று பொதுமக்களுக்கு துணிப்பை விநியோகம் செய்தவாறு 7 வயது சிறுமி ரவீனா என்பவர் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஸ்கேட்டிங் சென்று பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சிறுமி ரவீணாவை சமூக ஆர்வலர்கள் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.   நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் கருணாநிதி,சுவாமி விவேகானந்தா மற்றும் ஸ்கேட்டிங் கழக மாநில ஆலோசகர் ராஜகோபால்,  அருணாச்சலம் ஆன்மீக அரக்கட்டளை அசோக்குமார், அரசு மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா மருத்துவர் திரு ...

போலி ஆவணம் தயாரித்து 2 ஏக்கர் நிலம் மோசடி - 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது

Image
தூத்துக்குடியில் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து போலியாக பொது அதிகாரப் பத்திரம் எழுதி, அதன் மூலம் கிரையப்பத்திரம் பதிவு செய்து, 20 லட்சம் மதிப்புள்ள சுமார் 2 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவர் கைது தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டிய பட்டணம் பகுதியை சேர்ந்தவர் குரூஸ் பெர்னான்டோ மகன் ஜோசப் சேவியர் நேரியஸ் என்பவர் தற்போது இலங்கை, கொழும்பில் குடியிருந்து வருகிறார். இவர் தனது நண்பருடன் சேர்ந்து 1992ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை குமாரகிரி பகுதியில் 4 ஏக்கர் நிலத்தை கிரையமாக வாங்கி தங்களுக்குள் பிரித்து அனுவித்து வந்துள்ளனர்.  மேற்படி நிலத்தில் ஜோசப் சேவியர் நேரியஸ் என்பவருக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலத்தை மோசடியாக அபகரிக்க வேண்டும் எண்ணத்தில் திருநெல்வேலி பேட்டை பகுதியை சேர்ந்த தக்கா பிச்சை மகன் ரஹ்மத்துல்லா (43) என்பவர் தூத்துக்குடி புதுக்கோட்டையில் உள்ள மேற்படி 2 ஏக்கர் நிலத்தை,  தனக்கு சொந்தமான திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர் பகுதியிலுள்ள 1 செண்ட் நிலத்தோடு சேர்த்து 2019ம் ஆண்டில் திருநெல்வேலி பேட்டை சார்பதிவாளர் அலுவ...

வெளியான 10 நிமிடங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்கள்.! பட்டையை கிளப்பும் #வலிமை ட்ரெய்லர்!

Image
https://youtu.be/Gi83R8jEqZU

தூத்துக்குடி : மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் நாளை முதல் ஜன.2 வரை 3 நாட்கள் பொதுமக்கள் கூடுவதற்கு தடை.! - ஆட்சியர் உத்தரவு.!

Image
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்... "தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காகவும், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்காரன் வைரஸ் பரவலை தடுக்கவும், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும், பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடங்களில் ஒன்று கூடுவதால், கொரோனா மற்றும் ஒமைக்ரான வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால், பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் விடுமுறை நாட்களில் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்த உத்திரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடும் சூழ்நிலையில், கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து கடற்கரைப்பகுதிகளிலும், தூத்துக்குடி கடற்கரை சாலை, மற்றும் சுற்றுலாத்தவங்களில் பொதுமக்கள் 31.12.2021, 01.01.2022, 02.01.2022 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்படுகிறது. ...

அய்யய்யோ... மறுபடியும் முதல்ல இருந்தா...??சென்னையில் ' பொத்துக்கிட்டு ஊத்துது மழை

Image
மழைக்காலம் என்றாலே சென்னை மாநகர மக்களுக்கு நரக வேதனையாக தான் இருக்கும். வெள்ளம் வடியாமல் பொங்கி வழியும் சாலைகள், திக்குமுக்காட வைக்கும் போக்குவரத்து நெரிசல், வீடுகளுக்குள் புகும் கழிவு நீரும் வெள்ள நீரும் என சென்னை வாசிகள் லபோ.. திபோ.. என அடித்துக் கொள்ளும் நிலை தான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கின்றது. இப்படி கடந்த மாதம் பெய்த பெரும்பான்மையானது சென்னை வாசிகளை சுமார் ஒரு மாதம் முடக்கி விட்டது. கார்த்திகை முடிந்து மார்கழி பனி தொடங்கிய காலத்தில் கூட மழை பெய்து வந்தது. எப்போ தான் மழை நிற்குமோ என தவியாய் தவித்தார்கள் சென்னை வாசிகள்.  ஒரு வழியாக கடந்த சில நாட்களாக மழை போய் பனி வந்தது. அதிகாலை குளிரும் பகலில் வெயிலுமாக மக்கள் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் இன்று காலை வழக்கம்போல பனி முடிந்து வெயிலுடன் தொடங்கியது. வழக்கம் போல எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் தங்கள் வேலைகளைப் பார்க்க ஆங்காங்கே கிளம்பிவிட்டனர். இந்த சூழ்நிலையில் தான் இன்று பகல் 11 மணி அளவில், சென்னையில் உள்ள அண்ணா சாலை, இசிஆர் சாலை உள்ளிட்ட மாநகரம் முழுவதும் திடீரென்று கருமேகங்கள் திரண்டு...

சென்னை மாநகர காவல்துறையில் 86 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு

Image
  BREAKING  சென்னை மாநகர காவல்துறையில் 86 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு

வெடித்து சிதறிய ரியல்மி ஸ்மார்ட்போன்

Image
ரியல்மி நிறுவனத்தின் புதிய எக்ஸ்.டி. ஸ்மார்ட்போன் வெடித்து சிதறிய சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடித்து சிதறிய எக்ஸ்.டி.ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை பாதிக்கப்பட்ட நபர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் இருபுறங்களிலும் முழுமையாக சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூலும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவம் பற்றி பதில் அளித்த ரியல்மி, 'ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபரை தொடர்பு கொண்டு, அருகாமையில் உள்ள ரியல்மி சர்வீஸ் மையம் செல்ல அறிவுறுத்தி இருக்கிறோம். இந்த சம்பவத்தை விரைந்து சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்,' என தெரிவித்தது.

2021-ம் ஆண்டுக்கான சாகித்யா அகாடமி விருது -சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு அறிவிப்பு.

Image
"சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை" என்ற சிறுகதைக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #SahityaAkademiAward #Ambai #CSLakshmi #சிவப்புகழுத்துடன்ஒருபச்சைபறவை #அம்பை

17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம்.!! - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது.!

Image
17 வயது சிறுமியிடம்  திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காமராஜ் (30), (த/பெ. மிக்கேல் தெற்கு சிந்தலக்கட்டை, கடம்பூர்) என்பவர் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய  ஆய்வாளர் மாரியம்மாள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்படி எதிரி காமராஜை கைது செய்தார்.

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலியான சம்பவம்.!

Image
 சத்தியமங்கலம் அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலியான சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புளியங்கோம்பை வனப்பகுதியை ஒட்டி கூலைமுத்தான் என்ற விவசாயி தனக்கு சொந்தமான விளைநிலத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு புளியங்கோம்பை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று அவர் வளர்த்து வந்த கன்றுக்குட்டியை தாக்கியுள்ளது.  இறந்து கிடந்த கன்றுக்குட்டியை அதிகாலை கண்ட விவசாயி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அங்கு இருந்த கால் தடங்களை வைத்து கன்றுக்குட்டியை தாக்கியது சிறுத்தை என்பதை உறுதி செய்தனர்.  கடந்த சில நாட்களாகவே வனப்பகுதி விட்டு வெளியேறும் சிறுத்தை ஊருக்குள் புகுந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருவதாகவும் தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரவும் ஒமைக்ரான் : பள்ளி, கல்லூரிகளில் சுழற்சிமுறை வகுப்பு.! -சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை!

Image
 BREAKING பள்ளி, கல்லூரிகளில் சுழற்சிமுறை வகுப்புகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நாளை நடைபெறும் ஆலோசனையில் முடிவு செய்யப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.!*

Image
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் வலியுறுத்தல் சென்னையில் கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டி மத்திய அரசு அறிவுரை