Posts

Showing posts from March, 2024

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக மீனவர் அணி பதவியேற்பும் பாராட்டு விழாவும் நடைபெற்றது

Image
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக மீனவர் அணி பதவியேற்பும் பாராட்டு விழாவும் நடைபெற்றது  புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மீனவர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் புதிய நிர்வாகிகளுக்கான பதவி ஏற்பு விழாவும் பாராட்டு விழாவும் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்  மு ராமதாஸ் தலைமை தாங்கி புதிய நிர்வாகிகளுக்கு பதவியேற்பு உறுதி மொழியை ஏற்க வைத்து ஆடை போர்த்தி அனைவரையும் பாராட்டிப் பேசினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் . சேர்மன்  ஆர்.எல் வெங்கட்டராமன் வரவேற்றார்   பொதுச் செயலாளர் பேராசிரியர்  எ மு ராஜன் வாழ்த்திப் பேசினார்.  புதிய மீனவர் அணிக்குத் தலைவராக முதலியார்பேட்டை தொழிலதிபர் கோ. செ.சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.  துணைத் தலைவர்களாக  காலாப்பட்டு ஆ.குமார் மற்றும் நரம்பை  ரா ரஞ்சித் ஆகியோர் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர். மூர்த்திக்குப்பம் சுகுமார், சின்ன வீராம்பட்டினம் தனஞ்செயன் ஆகியோர் செயலாளர்கள் ஆகவும், கனக செட்ட்டிக...

விழிக்கு ஒளி திட்டம்

Image
விழிக்கு ஒளி திட்டம் கோவை தொண்டாமுத்தூர் கலாம் நண்பர்கள் குழு, மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் பவுண்டேஷன், மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து நடத்திய 9ஆம் ஆண்டு மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் (31:03:2024) ஞாயிற்றுக்கிழமை குளத்துப்பாளையம் ஆறுச்சாமி தேவர் வீதியில் உள்ள ஸ்ரீ கல்வி விநாயகர் கோவில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது இம்முகாமில் தாளியூர் பேரூராட்சி குளத்துப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கோவில்பட்டி அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 1 லட்சத்து 34 ரூபாய் பறிமுதல்.!

Image
 கோவில்பட்டி அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 1 லட்சத்து 34 ரூபாய் பறிமுதல்.! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தெற்கு குருவிகுளத்தில் பகுதியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில் ரூ.73,700 இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் பொறிகடலை, உளுந்து, சீனி உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து, வியாபாரிகளிடமிருந்து வசூலித்ததாகக் கூறினர். ஆனால் அவர்களிடம் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து, கோவில்பட்டி வட்டாட்சியர் சரவணப்பெருமாள் முன்னிலையில் வட்ட தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனர். இதேபோன்று கோவில்பட்டி அருகே திட்டங்களும் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த லோடு ஆட்டோவை சோதனை செய்தனர் அதில் 60 ஆயிரத்து 400 ரூபாய் இருப்பது தெரியவந்தது. எட்டயபுரம் ஆட்டு சந்தை...

பாஜக டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை" - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரச்சாரம்

Image
 "பாஜக டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை" - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரச்சாரம் தமிழகத்தின் நலனை மத்திய பாஜக அரசு காதில் வாங்கவில்லை. பாஜக டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும், நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை" என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார்.  தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கடம்பூர், சிதம்பரபுரம், அகிலாண்டபுரம், கொப்பம்பட்டி, குருவி நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.  அப்போது அவர் பேசுகையில் "பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்த போது தமிழக நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன் வைத்தோம். கச்சத்தீவை மீட்க வேண்டும், காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், முல்லைப் பெரியாறு பிரச்சினை தீர்க்க வேண்டும், நீட் தேர்வினை ஒழிக்க வேண்டும், எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக கொண்டு வர வேண்டும், நெய்வேலியில் உள்ள என்.எல். சி யில் தமிழகத்தைச் சேர...

காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் - வருமான வரித்துறையை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

Image
 காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் - வருமான வரித்துறையை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நடவடிக்கையை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்று ரூ.1,800 கோடி அபராதம் கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், வருமான வரி விவகாரம் தொடர்பாக மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். இதையடுத்து தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி எஸ். முரளீதரன் தலைமையில் பழைய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, சேவா தளம் ம...

தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி எல்லாம் உத்தரப்பிரதேசம், உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களுக்கு போகிறது, தமிழ்நாட்டிற்கு நிதி முறையாக வருவதில்லை" - கோவில்பட்டி பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி பேச்சு

Image
 "தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி எல்லாம் உத்தரப்பிரதேசம், உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களுக்கு போகிறது, தமிழ்நாட்டிற்கு நிதி முறையாக வருவதில்லை" - கோவில்பட்டி பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி பேச்சு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைத் தேர்தலையொட்டி, இந்தியா கூட்டணியின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று (30/03/2024) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, கூடி நின்ற ஆயிரக்கணக்கான மக்களை மத்தியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளைச் சேகரித்தார். பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: உங்களின் அன்பான வரவேற்பது என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு நன்றாக தெரியும் தேர்தல் நேரத்தில் உங்களை எல்லாம் சந்தித்து, நம்முடைய  முதலமைச்சர் தந்த வாக்கு உறுதி எல்லாம் நிறைவேற்றி இருக்கிறார்.  தேர்தல் நேரத்தில் இங்கே  இருக்கக்கூடிய சகோதரிகளுக்கு கட்டணம் இல்லாத பயணம் என்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பை, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் கை எழு...

தூத்துக்குடி தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டி : ஆட்சியர் தகவல்!

Image
  தூத்துக்குடி தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டி : ஆட்சியர் தகவல்! தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்.  தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு 20.03.2024 முதல் 27.03.2024 அன்று பிற்பகல் 3.00 மணி வரை 53 வேட்பு மனுக்கள் வேட்பாளர்களிடமிருந்து வரப்பட்டு 28.03.2024 அன்று தேர்தல் பொது பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, முன்னிலையில் தூத்துக்குடி பாரளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, அவர்களால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டது. இதில் 31 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்று 30.03.2024 பிற்பகல் 3.00 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது, பிற்பகல் 3.00 மணி வரை 3 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பொது பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, முன்னிலையில் தூத்துக்குடி பாரளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்ச...

சங்கரா கல்லூரி மாணவர் 39 நிமிடங்கள் 41 வினாடிகளில் 140 தேங்காய் சார்ந்த உணவுகள் தயாரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனை

Image
கோவை சங்கரா கல்லூரி மாணவர் சாதனை  39 நிமிடங்கள் 41 வினாடிகளில் 140 தேங்காய் சார்ந்த உணவுகள் தயாரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனை. கோவை சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் கேட்டரிங் சயின்ஸ் மற்றும் ஹோட்டல் மேலாண்மை இறுதியாண்டு படிக்கும் மாணவர் ரூபன்ராஜ், 39 நிமிடங்கள் 41 நொடி நேரத்தில் 140 தேங்காய் சார்ந்த உணவுகள் தயாரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ மற்றும் ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனை படைத்தார். கல்லூரியின் அதிநவீன சமையல் ஸ்டுடியோவில் இந்த நிகழ்வு நடை பெற்றது, அங்கு ரூபன்ராஜுக்கு முழு வசதியுடன் கூடிய சமையலறை மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. காலை 10:45 மணி முதல் உணவுகளைத் தயாரிக்க தொடங்கி மாணவர், காலை 11:24 மணிக்கு தேங்காயைப் பயன்படுத்தி இனிப்புகள், சாலடுகள், சூடான மற்றும் குளிர் பானங்கள், வேகவைத்த உணவுகள், அரிசி வகைகள், குழம்பு உணவுகள் சட்னி, தோசை, முதலிய மொத்தம் 140 வகையான உணவுகளை 39 நிமிடங்கள் 41 வினாடி நேரத்தில் தயார் செய்து சாதனை படைத்தார். இந்நிகழ்வின் போது கல்லூரியின் முதல்வர் வி.ராதிகா, துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட்...

நம்பியூர் காராப்பாடியில் தேர்தல் புறக்கணிப்பு

Image
 ஈரோடு மாவட்டம்கோபி செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி,நம்பியூர் அருகே உள்ள காராப்பாடியில் தேர்தல் புறக்கணிப்பு காராப்பாடி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அரசு வழிகாட்டி மதிப்பீடு வழங்காததால் தேர்தல் புறக்கணிப்பு செய்து கிராம மக்கள் வீதிகளில் தடுப்புகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. ஓட்டு கேட்டு யாரும் வரவேண்டாம் எனவும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் 300க்கும் மேற்ப்பட்டோர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தி.மு.க சிறுபான்மை நல உரிமை பிரிவு அணி மாநில செயலாளர் குற்றசாட்டு

Image
சிறுபான்மை மக்களை நசுக்குகின்ற வேலையை செய்த பா.ஜ.க.விற்கு துணை போனது அ.தி.மு.க தி.மு.க.சிறுபான்மை நல உரிமை பிரிவு அணி மாநில செயலாளர் குற்றசாட்டு பொய்யான பிரச்சாரங்களை தொடர்ந்து பா.ஜ.க.அரசு பரப்பி வருவதாகவும்,வரும் நாடாளுமன்ற தேர்தல் மக்கள் விரோத அரசுக்கும்,மக்களுக்கான இந்தியா கூட்டணிக்கும் நடைபெறும் யுத்தம் என தி.மு.க.சிறுபான்மை நல உரிமை பிரிவு அணி மாநில செயலாளர் சுபேர்கான் கோவையில் , தெரிவித்துள்ளார்.. வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து,பிரச்சாரம் செய்ய தி.மு.க.சிறுபான்மை நல உரிமை பிரிவு அணி மாநில செயலாளர் சுபேர்கான், கோவை வந்தார்.இந்நிலையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி மற்றும் நிர்வாகிகளிடையே ஆலோசணையில் ஈடுபட்ட அவர்,பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர்,சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக தி.மு.க.என்றுமே இருக்கும் என கூறிய அவர்,சி.ஏ.ஏ.,மதமாற்ற சட்டம்,பொது சிவில் சட்டம்,முத்தலாக் சட்டம் போன்ற சிறுபானமை மக்களை நசுக்கின்ற வேலையை பா.ஜ.அரசு செய...

தூத்துக்குடி, சிவன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தே சென்று மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு...!

Image
  தூத்துக்குடி, சிவன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தே சென்று மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு...! தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலர் கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்  பெரியசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தூத்துக்குடி சிவன் கோவில் தெரு, வடக்குரத வீதி, தெற்கு ரத வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் பொது மக்களிடம் திமுக ஆட்சியின் 3 ஆண்டு கால  சாதனை மற்றும் மழை வெள்ளத்தில் தூத்துக்குடி மாநகர மக்களை மாநகராட்சி சார்பில் மற்றும் கனிமொழி எம்பி சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகள் நேரடியாக சென்று வழங்கியது மற்றும் மாநகராட்சி சார்பில் தூத்துக்குடி மாநகரில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கூறி மீண்டும் கனிமொழியை வெற்றி வேட்பாளராக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென நடந்தே சென்று திமுக வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்... உடன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, கவுன...

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் எம் .பி .கனிமொழிக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரம் !

Image
  தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் எம் .பி .கனிமொழிக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரம் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை கருணாநிதியை ஆதாித்து முள்ளக்காடு, முத்தையாபுரம், பொட்டல்காடு, பொியசாமிநகர், எம்.ஜி.ஆா் நகர், சத்யாநகர், ராஜபாண்டி நகா், ஆகிய பகுதிகளில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சி அமைந்தபின் கலைஞர் வழியில் தளபதியார் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறார்.  அதே போல் கடந்த ஆண்டு எதிர்பாராமல் பெய்த கனமழையால் ஏற்பட்ட வௌ்ள பாதிப்பின் போது எல்லா தரப்பினருக்கும் நாம் ஓவ்வொரு வகையிலும் உதவிகள் செய்து மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றியுள்ளோம். என்பது பொதுமக்களுக்கு தெரியும். அதிமுக பிஜேபி கட்சிகளுக்கு வரும் தோ்தலில் சாியான பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினார்.  பிரச்சாரத்தின் போது, மாநகர திமுக செயலாளர் ஆன...

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து நினைவு தினம் : அமைச்சர், மேயர், மரியாதை

Image
 தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து நினைவு தினம் : அமைச்சர், மேயர், மரியாதை தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு அமைச்சர், மேயர் மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி நகராட்சி முன்னாள் தலைவர் குரூஸ் பர்னாந்து 94 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், வடக்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், பெருமாள் கோவில் அறங்காலர்கள் குழு தலைவர் செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், நிர்மல்ராஜ், சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கோவையில் அட்வான்ஸ்டு குரோ ஹேர் மற்றும் குளோ ஸ்கின் கிளினிக் திரைப்பட நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா தொடங்கி வைத்தனர்

Image
கோவையில் அட்வான்ஸ்டு குரோ ஹேர் மற்றும் குளோ ஸ்கின் கிளினிக் - கின் 50 வது கிளை துவக்கம் பிரபல திரைப்பட நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா தொடங்கி வைத்தனர் இந்தியாவின் முன்னணி ஹேர் & ஸ்கின் கிளினிக் நிறுவனமான குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக் கின் கிளை கோவை ஆர்.எஸ் புரத்தில் 2022 ஆம் தொடங்கப்பட்டது. கோவை மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பேராதரவோடும் வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. தற்போது கோவையின் முக்கிய இடமான அண்ணா சிலை அருகே அவினாசி சாலையில் பிரமாண்டமாக 50 வது புதிய கிளையை தொடங்கியுள்ளது. அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக், முடி மீளுருவாக்கம் மற்றும் தோல் சிகிச்சையில் புகழ்பெற்ற முன்னணி நிறுவனம் ஆகும்.  முழு அர்ப்பணிப்புடன் சேவை, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் முடி வளர்ச்சிக்கான அணுகக்கூடிய தீர்வுகளை வழங்குவதற்கு மேம்பட்ட GroHair & GloSkin கிளினிக், மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத அணுகுமுறைகளை கொண்ட  விரிவான சிகிச்சைகளை வழங்குகிறது.  இதில் Percutaneous FUE Hair Transplant, StemX 27 TM (PRP Pro+), LASER Hair Therapy, Cosmetic System, GFC Fib...

100% வாக்களிப்புக்கு உதவுவோம் வாரீர் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்

Image
100% வாக்களிப்புக்கு உதவுவோம் வாரீர் சமூகஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்  2024 பாராளுமன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த காலங்களில் பெரும்பாலும் சுமார் 70 சதவிகித வாக்கு பதிவு மட்டுமே நடைபெற்றுள்ளதால் கிட்டத்தட்ட 30% மக்களின் எண்ணத்தை அறிய முடியாமல் உண்மையான மக்கள் பிரதிநிதியை‌ தேர்ந்தெடுக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. அந்த வகையில் உண்மையான ஜனநாயகத்தை நாம் பெற்றுள்ளோமா என்றால் அதுவும் கேள்விக்குறியேயாகும். ஆகவே உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்பட நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்று நாம் வாழ்கின்ற பகுதியில் உள்ள அனைவரும் வாக்களிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இது அரசு அதிகாரிகளால் மட்டுமே ஏற்படுத்த முடியாத ஒன்று என்பதையும் உணர வேண்டும். நாடும் நாமும் நன்றாக இருக்க வேண்டும் என்னும் ஆசை அனைவரும் மனதிலும் இருக்கின்ற பொழுது 100% வாக்குப்பதிவையும் உருவாக்கும் பணியையும் கடமையையும் நாம் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதிகளிலும் கிராமத்திலும் ஊர்களிலும் உள்ள சுய உதவிக் குழுக்கள் முதல...

கோவை சூலூரில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

Image
சூலூர் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்         சூலூர் ஜெயமாருதி தேகப் பயிற்சி சாலையின் முன்னாள் பொருளாளர் ஆறுமுகம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலவச கண் குறை அறுவை சிகிச்சை முகாம் ரத்ததான முகாம் ஆயுர்வேதா சித்தா ஹோமியோ பிசியோதெரபி மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் சூலூர் எஸ் ஆர் எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் முகாமில் கண் அறுவை சிகிச்சைக்கு 20 பேர் அரவிந்த் கண் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர் ஆர்விஎஸ் பல் மருத்துவமனை சார்பில் 50க்கும் மேற்பட்டவர்கள் பல் சுத்தம் செய்தல் கரை நீக்குதல் பல் அடைப்பு ஆகியவற்றை மேற்கொண்டனர் ஆர்.வி.எஸ் சித்தா, பிசியோதெரபி மருத்துவமனை சார்பில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை செலவு கண்டறிந்து அவர்களுக்கு உன்டான மருந்துகள் வழங்கப்பட்டது முகாமில் மருத்துவர்கள் கலந்து கொண்டு வருகை தந்த நோயாளிகளுக்கு மருந்துகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது, குண்டடம் திருநந்தி சித்தா அறக்கட்டளை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு மூலிகை டானிக் வழங்கப்பட்டது. ...

பண்ணாரி கோவிலில் பிச்சை எடுத்ததாக ஒன்றரை லட்சம் ரூபாயுடன் திருப்பூரில் சுற்றிய பெண்.... ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்!

Image
 பண்ணாரி கோவிலில் பிச்சை எடுத்து ஒன்றரை லட்சம் சேர்த்ததாக கூறிய பெண் ஒருவரிடம், ஆவணங்கள் இல்லாமல் இருந்ததால் அந்த பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்தப்பணம் பிச்சை எடுத்து தான் சேர்த்தாரா? அல்லது திருட்டு செயல் எதிலும் ஈடுபட்டாரா? எனவும் போலீசார் விசாரிக்கிறார்கள். திருப்பூர், காங்கயம் ரோடு,  நல்லூர் சர்ச் அருகே  இன்று மாலை 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சேலையில் கட்டுக்கட்டாக பணத்தை சுற்றி வைத்துக் கொண்டு அந்த பகுதியில் சுற்றி வந்தார்.  இதைப்பார்த்து அப்பகுதியினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.   அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த  மாநில வரி அலுவலர் குணசேகர்,சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு மணிமேகலை, சரவணக்குமார் உள்ளிட்ட போலீசார்  அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் அவரை சோதனையிட்ட அதிகாரிகள், ஆவணம் இல்லாமல்  அந்தப்பெண் வைத்திருந்த  1லட்சத்து 50 ஆயிரம் ரூப...

திருப்பூரில் நடுரோட்டில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்... பரபரப்பு வீடியோ

Image
திருப்பூர் மத்திய பேருந்து நிலையட்த்துக்கு வெளியே சாலையோர கடை அமைக்க அனுமதிக்கவில்லை எனக்கூறி நடுரோட்டில் வாலிபர் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் பரபரப்பாக இருக்ககூடிய இடமாகும். இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. இந்த பேருந்து நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஏராளமான தள்ளுவண்டி கடைகள், பிளாட்பார கடைகள் செயல்படுகின்றது.  இந்த நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த கணபதி என்பவர் பழைய பேருந்து நிலையத்துக்கு வெளியே சாலை ஓரக்கடை அமைத்து நடத்தி வந்தார்.  மாநகராட்சி அதிகாரிகள் தனது கடையை மட்டும் அகற்ற சொல்வதாக கூறி திடீரென்று கடையில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்து நடுரோட்டில் போட்டு உடைத்தார்.  அப்போது கணபதியை போலீசார் தடுத்து சமாதானப்படுத்தினார்கள். ஆனாலும் சமாதானம் ஆகாத  கணபதி, கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.  போலீசார் கணபதியை தடுத்து அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.  திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் இருப்பதாகவும், மாநகராட்சி அதிக...

ஈரோடுமாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா - 1,05, 96,146 ரூபாய் ரொக்கம், 295 கிராம் தங்கம், 757 கிராம் வெள்ளி உட்பட பக்தர்கள் காணிக்கை செலுத்தி நேர்த்தி கடன்.

Image
 ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் அடுத்துள்ள அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் பெருந்திரு விழா, கடந்த 26-ம் தேதி அதிகாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களில் இருந்து லட்சக் கணக்கான மக்கள் திரண்டு, குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். குண் டம் திருவிழாவை முன்னிட்டு, ஏராள மான பக்தர்கள், தங்களது நேர்த்திக் கடனை, காணிக்கையாக உண்டியல் களில் செலுத்துவது வழக்கம்.  அதன்படி கடந்த இரண்டு நாட்களாக கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு ள்ள, 20 உண்டியல்கள் திறக்கப்பட்டு ஒவ்வொன்றாக எண்ணப்பட்டது.எண் ணப்பட்ட உண்டியல்களில் இருந்து, ஒரு கோடியே, ஐந்து லட்சத்து,தொண் ணூற்றி ஆறாயிரத்து, நூற்றி நாற்ப் பத்தி ஆறு ரூபாய் ரொக்கம் மற்றும்  295 கிராம்தங்கமும்,757கிராம்வெள்ளி ஆகியவை உண்டியல்களில் இருந்து சேகரிக்கப்பட்டு, கோவில் நிர்வாகம் மூலம், வங்கியில் செலுத்தப்படவுள் ளது.  உண்டியல் எண்ணும் பணி,கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் இரா மேனகா தலைமையில்  பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக் கோயில் உதவி ஆணையர் / செயல் அலுவலர்.சு.சுவாமிநாதன், சத்தி இந்து சமய அறநிலையத்துறை,...

திருப்பூர் தொகுதியில் 38 பேரில் 22 வேட்புமனுக்கள் நிராகரிப்பு... களத்தில் 16 பேர்...ஒரே வாக்குப்பதிவு இயந்திரம் தான்

Image
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு பரிசீலனையில், 22 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. முக்கிய வேட்பாளர்கள் உட்பட 16 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.  திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு பரீசிலனை  நடந்தது. திருப்பூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜிடம் முன்னிலையில் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.  திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன், அதிமுக வேட்பாளர் அருணாச்சலம், பாஜக வேட்பாளர் முருகானந்தம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.  ஆனால் அதேசமயம் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 38 பேர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இன்றைய பரிசீலனையில் 22 நிராகரிக்கப்பட்டு, 16 மனுக்கள் தான் ஏற்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.சுப்பராயன், அதிமுகவில் அருணாச்சலம், பாஜகவில் ஏ.பி.முருகானந்தம், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீதாலட்சுமி, பகுஜன் சமாஜ் கட்சியின் பழனி சுயேச்சைகளான கண்ண...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி விமர்சனம்

Image
கோவையில் வெப்பம் அதிகரித்துள்ளதாக கூறும் அண்ணாமலை டார்ஜிலிங்க்,காஷ்மீர்,ஊட்டி போன்ற குளிர்பிரதேசத்தில் சென்று தேர்தலில் போட்டியிட்டு இருக்கலாம் என பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி விமர்சனம்.. கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க.மாநில தலைவர்  அண்ணாமலை  அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய போது  குளுமையாக இருந்த கோவையில் வெப்பம் அதிகரிக்க திராவிட அரசுகளே காரணம் என பேசியிருந்தார்.இந்நிலையில் ஒரு கட்சியால் நகரத்தின் வெப்பத்தை அதிகரிக்க முடியுமா என அண்ணாமலையின்  பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில் கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரபி இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது பேசிய அவர்,பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை தோல்வி பயத்தில் ஏதேதோ உளறி வருவதாக கூறிய அவர்,கோவையில் வெப்பம் அதிகரித்துள்ளதாக கூறும் அண்ணாமலை டார்ஜிலிங்,காஷ்மீர்,ஊட்டி போன்ற குளுமை பிரதேசத்தில் சென்று தேர்தலில் போட்டியிடலாம் என நகைச்சுவையாக விமர்சித்தார்.கோவையை பொறுத்த வரை இந்தியா கூட்டணியின் தி.மு.க.வேட்பாளர் வெ...

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கொமாரபாளையம் அருள்மிகு ஸ்ரீ சோழ தேச மாரியம்மன் திருக்கோயில் கம்பம் விழா.

Image
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்,கொமார பாளையம் ஊராட்சி, கொமார பாளையத்தில், எழுந்தருளியுள்ள,ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் தங்கை, ஸ்ரீ சோழ தேச மாரியம்மன் கோயில் கம்பம் விழா கடந்த 11ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கி, தினமும் இரவில் கம்பம் சுற்றி அம்மன் புகழ்பாடும் களியாட்டம் ஆடிவந்தனர்.திருவிழா வின் முக்கிய நிகழ்வாக, 27 ஆம் தேதி இரவு பவானி ஆற்றில் இருந்து,அம்மனுக்கு தீர்த்தக் குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கான,பக்தர்கள் கலந்து கொண் டு, அம்மனுக்கு தீர்த்த குடம் எடுத்து வந்தனர். பின்னர் இரவு கம்பம் ஆடுதல் நிகழ்ச்சி நடை பெற்றது. காலை6 மணியளவில் அம்மன் அழைத்தல் நிக ழ்ச்சியும், காலை 10 மணிக்கு மாவிளக்கு பூஜை யும் நடைபெறுகிறது. பின்னர் அம்மனுக்கு கடா வெட்டி, பொங்கலிட்டு,சிறப்பு அலங்கார பூஜை கள் நடைபெறவுள்ளன.மாலை 4 மணிக்கு கம் பம் ஆடுதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு கம் பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், நடைபெற வுள்ளன .29ம் தேதி மஞ்சள் நீராடு தலும், ஏப்ரல் 1ம்தேதி அம்மனுக்கு மறு பூஜையும் நடைபெற உள்ளன. .ஸ்ரீ சோழா தேச மாரியம்மன் கோவில் திரு விழாவையொட்டி, கொமார பாளையம் கிராமம், விழாக்கோலம...

நாட்டில் முதன் முறையாக இந்திய பட்டய வரி பயிற்சியாளர்கள் நிறுவனத்தின் கோயமுத்தூர் சாப்டர் துவக்கம்

Image
நாட்டில் முதன் முறையாக இந்திய பட்டய வரி பயிற்சியாளர்கள் நிறுவனத்தின் கோயமுத்தூர் சாப்டர்  கோவையில்  துவங்கியது.. இந்திய பட்டய வரி பயிற்சியாளர்கள் நிறுவனத்தின் கோயமுத்தூர் சாப்டர் இந்தியாவில் முதன் முறையாக துவங்கப்பட்டுள்ளது இதற்கான  துவக்க விழா வடகோவையில் உள்ள குஜராத் சமாஜ் அரங்கில் நடைபெற்றது கோயமுத்தூர் சாப்டர் தலைவர் சுப்ரமணியன்,செயலாளர் நல்ல பாண்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில்,,துணை தலைவர் சுந்தர் ராஜன்,துணை செயலாளர் வேலுமணி,பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மேனாள் நீதிபதி முகம்மது ஜியாபுதீன்,பாரதியார் பல்கலைகழக டீன் முனைவர் லவ்லினா லிட்டில் பிளவர்,லயன்ஸ் கிளப் துணை நிலை ஆளுநர் நித்யானந்தம்,இன்ஸ்டியூட் ஆப் சார்ட்டர்டு டேக்ஸ் பிராக்சனர்ஸ் இந்தியா தலைவர் ஸ்ரீதர் பார்த்சாரதி,நேரு கல்வி குழுமங்களின் இயக்குனர் முரளிதரன்,ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அதிகாரி முரளி கிருஷ்ணா,ஓய்வு பெற்ற அதிகாரி கோதண்டராம் ஐ.ஆர்.எஸ்.ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செய்தியாளர்களிடம் பேசின...

மோடியை பற்றி பாசாங்குக்கு கூட 10 சொற்கள் பேசாத பழனிசாமிதான், தமிழ்நாட்டைக் காப்பாற்றப் போறாராம்..." - தூத்துக்குடி தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Image
 "மோடியை பற்றி பாசாங்குக்கு கூட 10 சொற்கள் பேசாத பழனிசாமிதான், தமிழ்நாட்டைக் காப்பாற்றப் போறாராம்..." - தூத்துக்குடி தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நேற்று மாலை நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி மற்றும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரை ஆதரித்து வாக்கு கேட்டு எழுச்சியுரை ஆற்றினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில்:- முத்துநகரில் இருந்தும், சேதுச் சீமையில் இருந்தும் கடல் அலைகளைப்போல், எழுச்சியோடு கூடியிருக்கும் உங்களைப் பார்க்கும்போது, மகிழ்ச்சியாக மட்டுமல்ல, நாற்பதுக்கு நாற்பதும் நாம்தான் என்ற உறுதியும் வந்துவிட்டது! இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு தங்களின் உயிரையும், உடலையும் அர்ப்பணித்த தளகர்த்தர்கள் பலர் பிறந்த தியாக மண்ணிற்கு நான் வந்திருக்கிறேன்.  ஒருவகையில் இப்போது நடப்பதும் விடுதலைப் போராட்டம்தான். இது சர்வாதிகாரியிடம் இருந்து ஜனநாயகத்தை மீட்பதற்கான விடு...

"பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து அதிமுக ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும்" : தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

Image
 "பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து அதிமுக ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும்" : தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு! நாங்கள் நினைத்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும் என தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து நேற்று மாலை பிரசாரம் செய்தார். இதற்காக விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உள்ள மைதானத்தில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்துள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு  அப்போது அவர் பேசுகையில், பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கள்ளக்கூட்டணி வைத்ததாக பேசுகிறீர்களே அதற்கான ஆதாரம் உள்ளதா?  திமுகவுடன்  பாரதிய ஜனதா கள்ளக்கூட்டணி வைத்தற்கான ஆதாரத்தை வாக்களப் பெருமக்களாகிய உங்களிடம் காட்டுகிறேன் என்று புகைப்படத்தை காட்டினார்.  பிரதமர் தமிழகம் வந்தபோது, முதல்வராக இருந்த நான் பல் இளித்தேன் என்கிறார் ...

பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக நவீன அறிவியல் துறை தொடர்பான மூன்று நாட்கள் பயிற்சி முகாம்

Image
கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக நவீன  அறிவியல் துறை தொடர்பான மூன்று நாட்கள்   பயிற்சி பட்டறை துவங்கியது.. கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக நவீன வளரந்து வரும் அறிவியல் துறை தொடர்பான  பயிற்சி பட்டறை மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க நிகழ்ச்சி கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது..நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் யசோதா தேவி வரவேற்புரையாற்றினார்.சிறப்பு விருந்தினராக,பேராசிரியர் மணி கலந்து கொண்டு பேசினார்.அப்போது பேசிய அவர்,நவீன தொழில் நுட்பத்தில் அறிவியல் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்த அவர்,நவீன அறிவியலை பாடபுத்தகம் மட்டுமின்றி கற்றல் திறனோடு  மாணவ,மாணவிகள் தெரிந்து கொள்வதன் அவசியம் குறித்து பேசினார்...நிகழ்ச்சியின் இறுதியாக கல்லூரியின் முதல்வர் முனைவர் மீனா நன்றியுரை வழங்கினார்.. மூன்று நாட்கள் பல்வேறு அமர்வுகளாக நடைபெற உள்ள இதில்,பெங்களூர் பல்கலைகழக இயற்பியல் துறை பேராசிரியர்  உஷா தேவி,சென்னையை சேர்ந்த பேராசிரியர்கள் ஸ்ரீதர் மூர்த்தி ஆகியோர் கருத்துரை...

ரோட்டரி கோயமுத்துர் கேலக்சி சங்கம் சார்பாக கேலக்ஸி கிரிக்கெட் டிராபி போட்டி

Image
ரோட்டரி கோயமுத்துர் கேலக்சி சங்கம் சார்பாக கேலக்ஸி கிரிக்கெட் டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது டைப் ஒன் டயாபடீஸ் மற்றும் செவித்திறன் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்காக நிதி திரட்டும் வகையில் ரோட்டரி கோயமுத்துர் கேலக்சி சங்கம் சார்பாக 1st Edition Inter District பகல்-இரவு கிரிக்கெட் போட்டி சரவணம்பட்டி உள்ள 22 யாட்ஸ் பகுதியில் மூன்று நாட்கள் நடைபெற்றது இதில் பெங்களுர் சென்னை,கோவை,நாமக்கல்,கும்பகோணம் மற்றும் சேலம் ஆகிய அணியில் இருந்து 100க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.கோவை மற்றும் நாமக்கல் இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் நாமக்கல் அணி கோப்பையை கைப்பற்றியது.போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி: திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு தாக்கல்.!

Image
 தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி: திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு தாக்கல்.! தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி மாவட்ட ஆட்சியர் /அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதியிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க. வேட்பாளராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தங்கையுமான கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் முதல் வீதிவீதியாக சென்று மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதியிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி போட்ட...

தூத்துக்குடி : வாக்கு சேகரிப்பில் சட்டென மாறிய பிளான் - காய்கறி சந்தை, மீனவர் பகுதிகளில் நடந்து சென்று வாக்கு கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.!

Image
 தூத்துக்குடி : வாக்கு சேகரிப்பில் சட்டென மாறிய பிளான் - காய்கறி சந்தை, மீனவர் பகுதிகளில் நடந்து சென்று வாக்கு கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சிந்தலக்கரையில் பிரச்சாரம் செய்கிறார். முன்னதாக அவர் சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். இரவில் தனியார்  ஓட்டலில் ஓய்வெடுத்தார்.  தூத்துக்குடி தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த முதல்வர் மு. க.ஸ்டாலின், இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு, தூத்துக்குடி தமிழ்சாலை வழியாக வந்து, தூத்துக்குடி காமராஜர் தினசரி காய்கனி சந்தையில் நடந்து சென்று அங்குள்ள வியாபாரி மற்றும் பொதுமக்களை சந்தித்து காய்கறிகள் வரத்து, காய்கறிகள் தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்து திமுக வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார். அப்போது பாரதிநகரை சேர்ந்த மேரி என்ற மூதாட்டி சந்தையில் வைத்து தான் காய்கறி வாங்க கொண்டு வந்த பணம் ரூ.1500 தொலைந்து விட்டதாக முதல்வரிடம் கூறினார். அவருக்கு ஆறுதல் கூறிய ...